sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தாய்மார்கள், சகோதரிகளின் ஆசி: பிரதமர் மோடி பெருமிதம்!

/

தாய்மார்கள், சகோதரிகளின் ஆசி: பிரதமர் மோடி பெருமிதம்!

தாய்மார்கள், சகோதரிகளின் ஆசி: பிரதமர் மோடி பெருமிதம்!

தாய்மார்கள், சகோதரிகளின் ஆசி: பிரதமர் மோடி பெருமிதம்!

6


ADDED : மார் 08, 2025 02:39 PM

Google News

ADDED : மார் 08, 2025 02:39 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத்: 'தாய்மார்கள், சகோதரிகளின் ஆசீர்வாதங்கள் எனக்கு வந்து கொண்டே இருப்பதால், நான் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறேன்,'' என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

குஜராத் மாவட்டம் நவ்சாரியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு பெண்ணுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் பெண்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பெண்களிடமிருந்து உத்வேகங்களைப் பெறுவது நமக்கு முக்கியம்.

எங்கள் அரசு பெண்களுக்காக பாடுபடுகிறது. ஆயிரக்கணக்கான கழிப்பறைகளைக் கட்டி பெண்களுக்கு கண்ணியத்தை அளித்தோம். பெண்கள் தலைமையிலான வளர்ச்சிப் பாதையில் இந்தியா பயணிக்கிறது. புதிய பார்லிமென்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மசோதா பெண்களை வலுப்படுத்துவதாகும். இது சகோதரிகள் மற்றும் தாய்மார்களுக்கான எனது அர்ப்பணிப்பு. ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஜனாதிபதியாக இருக்கிறார்.

இன்று பெண்களிடமிருந்து ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டிய நாள். நான் உலகின் மிகப் பெரிய பணக்காரன் என்று பெருமையுடன் சொல்ல முடியும். எனக்கு கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் ஆசீர்வாதங்கள் உள்ளன. இந்த ஆசீர்வாதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதனால் தான் நான் உலகின் மிகப் பெரிய செல்வந்தராக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us