sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆற்று நீரில் இறந்து கிடந்த யானையின் உடல் மீட்பு

/

ஆற்று நீரில் இறந்து கிடந்த யானையின் உடல் மீட்பு

ஆற்று நீரில் இறந்து கிடந்த யானையின் உடல் மீட்பு

ஆற்று நீரில் இறந்து கிடந்த யானையின் உடல் மீட்பு


ADDED : ஜூலை 08, 2025 08:32 PM

Google News

ADDED : ஜூலை 08, 2025 08:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; பாலக்காடு அருகே, ஆற்றில் கரை ஒதுங்கிய காட்டு யானையின் உடல் மீட்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு அருகே உள்ள வன எல்லையோர பகுதி பாலக்கயம். இங்குள்ள, இரும்பாம்முட்டி பகுதியில், காட்டு யானையின் உடல் ஆற்றில் கரை ஒதுங்கி கிடப்பதை, பகுதியில் பணிக்கு சென்ற தொழிலாளிகள் கண்டனர்.

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர். தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் இருந்து, யானையின் உடலை வனத்துறையினர் மீட்டனர். வனத்துறையின் கால்நடை மருத்துவர் டேவிட் ஆபிரகாம் தலைமையில் பிரேத பரிசோதனை செய்து, யானையின் உடலை அடக்கம் செய்தனர்.

வனத்துறை அதிகாரி கூறுகையில், 'ஆற்றில் இறந்து கிடந்த பெண் யானைக்கு 15 வயதிருக்கும். மலை மேல் இருந்து கால் தவறி விழுந்ததில் இறந்திருக்கலாம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us