sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திருப்பதி இஸ்கான் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு அதிகரிப்பு

/

திருப்பதி இஸ்கான் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு அதிகரிப்பு

திருப்பதி இஸ்கான் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு அதிகரிப்பு

திருப்பதி இஸ்கான் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு அதிகரிப்பு

1


ADDED : அக் 28, 2024 10:45 AM

Google News

ADDED : அக் 28, 2024 10:45 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமலை: திருப்பதியில் பிரபலமான இஸ்கான் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களாக விமானங்கள், விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த மிரட்டலை தொடர்ந்து நடத்தப்படும் சோதனையில், அது வெறும் புரளி என தெரிய வருகிறது. இதனால், வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்த விவகாரத்தில் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு சில கண்டிப்புகளை விதித்துள்ளது.

இந்த நிலையில், திருப்பதியில் பிரபலமான இஸ்கான் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பக்தர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று கோவிலின் இ-மெயில் முகவரிக்கு வந்த மெசேஜில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ., தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோவிலை தகர்ப்பார்கள் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனால், பதறிப்போன கோவில் நிர்வாகிகள், இது தொடர்பாக போலீசாருக்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் கோவிலின் மூலைமுடுக்குகளிலும் தீவிர சோதனை நடத்தினர். எந்த வெடிபொருட்களும் கைப்பற்றப்படாத நிலையிலும், கோவிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, கடந்த 26ம் தேதி திருப்பதியில் உள்ள பிரபலமான 2 ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, பின்னர் நடந்த சோதனையில் வதந்தி என தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us