sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி, மும்பை ஐகோர்ட்டுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் அவசரமாக வெளியேற்றப்பட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள்

/

டில்லி, மும்பை ஐகோர்ட்டுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் அவசரமாக வெளியேற்றப்பட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள்

டில்லி, மும்பை ஐகோர்ட்டுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் அவசரமாக வெளியேற்றப்பட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள்

டில்லி, மும்பை ஐகோர்ட்டுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் அவசரமாக வெளியேற்றப்பட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள்

1


ADDED : செப் 13, 2025 05:43 AM

Google News

ADDED : செப் 13, 2025 05:43 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : டில்லி மற்றும் மும்பை உயர் நீதிமன்றங்களுக்கு, 'இ - மெயில்' வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் உள்ளிட்ட அனைவரும் நீதிமன்ற வளாகத் தை விட்டு வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

இ - மெயில் டில்லி மற்றும் மும்பையில் உள்ள உயர் நீதிமன்றங்கள் நேற்று வழக்கம்போல் காலை இயங்க துவங்கின. முன்னதாக, அந்த நீதிமன்றங்களின் இ - மெயில் முகவரிக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

டில்லி உயர் நீதிமன்றத்திற்கு வந்த மிரட்டல் கடிதத்தில், 'நீதிமன்றத்தின் மூன்று இடங்களில் சக்திவாய்ந்த வெடி குண்டுகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன.

'ஏற் கனவே விடுக்கப்பட்ட பொய்யான மிரட்டல்கள் போல் இது இருக்காது; டில்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் நிகழ்த்தப்படும் மு ஸ்லிம்களின் பிற் பகல் தொழுகைக்குபின் அவை வெடித்து சிதறும்' என, குறிப் பிடப்ப ட்டிருந்தது.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணைக்கு இடையே நீதிமன்ற ஊழியர்கள், நீதிபதிகளிடம் இந்த தகவலை தெரிவித்தனர். இதைஅடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணைகளை உடனே ஒத்திவைத்ததுடன், நீதிமன்ற வளாகத்தை விட்டு அனைவரையும் வெளியேறும்படி உத்தரவிட்டனர்.

இதை த்தொடர்ந்து, நீதிமன்ற வளாகங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் உட்பட அனைவரும் வெளியேற்றப் பட்டனர்.

சோதனை இதற்கிடையே போலீசார், மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் டில்லி மற்றும் மும்பை உயர் நீதிமன்ற வளாகங்களில் சோதனையிட்டனர்.

நீண்டநேர சோதனைக்குபின் வெடிகுண்டுகள் ஏதும் இல்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகங்கள் பிற்பகலுக்கு பின் மீண்டும் இயங்கின.

உதயநிதி மகனுக்கு எச்சரிக்கை

டில்லி உயர் நீதிமன்ற இ - மெயிலுக்கு, கனிமொழி என்பவரின் பெயரில் வந்த மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 1998ல் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தைபோல், பீஹாரின் பாட்னாவில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்வோம். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ., அமைப்பினர் உதவியுடன் ஷியா முஸ்லிம் பிரிவின் டாக்டர் ஷா பைஷல் என்பவர் வாயிலாக வெற்றிகரமாக குழு உருவாக்கப்பட்டுள்ளது. பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,க்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. ஆனால், சில கட்சிகள் குடும்ப அரசியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி, அந்த அமைப்புகளுக்கு எதிராக போராடாமல் உள்ளன. எனவே, வாரிசுகளை ஆட்சிக்கு வராமல் தடுக்கும் வகையில், மதசார்பற்ற கட்சிகளுக்கு புதிய தலைவர்களை உருவாக்க வேண்டும். நாங்கள், தி.மு.க.,வின் தலைமைப் பொறுப்பை ஏற்க டாக்டர் எழிலனை பரிந்துரைக்கிறோம். தமிழக துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்பநிதி மீது இந்த வாரம் ஆசிட் வீசப்படும். இதுபற்றி உளவுத்துறைக்கு தெரியவாய்ப்பில்லை. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us