sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெண் டாக்டர் குடும்பத்துக்கு லஞ்சமா: 'அவமானப்படுத்தும் முயற்சி' என்கிறார் மம்தா

/

பெண் டாக்டர் குடும்பத்துக்கு லஞ்சமா: 'அவமானப்படுத்தும் முயற்சி' என்கிறார் மம்தா

பெண் டாக்டர் குடும்பத்துக்கு லஞ்சமா: 'அவமானப்படுத்தும் முயற்சி' என்கிறார் மம்தா

பெண் டாக்டர் குடும்பத்துக்கு லஞ்சமா: 'அவமானப்படுத்தும் முயற்சி' என்கிறார் மம்தா

8


ADDED : செப் 09, 2024 04:51 PM

Google News

ADDED : செப் 09, 2024 04:51 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் டாக்டரின் குடும்பத்திற்கு கோல்கட்டா போலீசார் பணம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்து உள்ளார்.

பெண் டாக்டரின் பெற்றோர் கூறுகையில், ஆரம்பம் முதலே போலீசார் வழக்கை சரியாக கையாளவில்லை. மகளின் உடலை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை. பிறகு எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட போது, போலீஸ் உயர் அதிகாரி மூலம் எங்களுக்கு பணம் கொடுக்க முயற்சித்தனர் என குற்றம் சாட்டினர்.

இதற்கு பதிலளித்த மம்தா கூறுகையில், அவர்களுக்கு போலீசார் மூலம் பணம் கொடுக்க முயற்சி ஏதும் செய்யவில்லை. இது மே.வங்கத்தை அவமானப்படுத்த நடக்கும் முயற்சி ஆகும். பணம் கொடுத்து ஒருவரின் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. மகளின் நினைவாக அவர்கள் ஏதும் செய்ய விரும்பினால், அவர்கள் எங்களை நாடலாம். அரசு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

சம்பவம் நடந்ததும் கோல்கட்டா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால், துர்கா பூஜை காரணமாக சட்டம் ஒழுங்கு பற்றி நன்கு தெரிந்த ஒருவர் பதவியில் இருந்தால் அது நன்றாக இருக்கும் எனக்கருதி அதனை ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us