sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சொத்து தகராறில் அண்ணன் சுட்டுகொலை

/

சொத்து தகராறில் அண்ணன் சுட்டுகொலை

சொத்து தகராறில் அண்ணன் சுட்டுகொலை

சொத்து தகராறில் அண்ணன் சுட்டுகொலை


ADDED : பிப் 14, 2025 11:09 PM

Google News

ADDED : பிப் 14, 2025 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துவாரகா: சொத்து தகராறில் அண்ணனை சுட்டுக் கொன்ற தம்பி உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

துவாரகா பகுதியின் மதியாலா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தர்மிந்தர் தலால், 35. இவரது இளைய சகோதரர் ரவீந்தர் தலால். இவர்களுக்கு சொந்தமாக பூர்விக சொத்துக்கள் இருந்தன. இவற்றை பிரிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

கிராம பஞ்சாயத்தில் இதுதொடர்பாக பேச்சு நடத்தப்பட்டது. எனினும் அது தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு, தர்மிந்தரை சந்தித்து, வாடகை வருவாயை பிரிப்பது தொடர்பாக ரவீந்தர் பிரச்னை செய்தார்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, தர்மிந்தரை ரவீந்தர் சுட்டார். இதில் இரண்டு குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், ரவீந்தரையும், அவரது கூட்டாளிகளான சதீந்தர், ஜாஹித், அம்னீஷ் ஆகியோரையும் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us