ADDED : ஜன 17, 2025 11:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; பாலக்காடு அருகே பைக் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாடானம்குறுச்சி பொயிலூர் பகுதியைச் சேர்ந்த முகமதலியின் மகன் அமீன் 21, ஓங்கல்லூர் பகுதியில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்த இவர் பணிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்,
அப்போது, வாடானம் குறிச்சி ஊராட்சி அலுவலகம் அருகே, எதிரே பட்டாம்பியில் இருந்து பாலக்காட்டுக்கு வந்து கொண்டிருந்த தனியார் பஸ் மோதியது. படுகாயமடைந்த அமீனை, அப்பகுதி மக்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து, சொர்ணுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.