sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மஹாராஷ்டிராவில் கோர விபத்து; பஸ் மோதியதில் 4 பேர் பலி; 25 பேர் படுகாயம்

/

மஹாராஷ்டிராவில் கோர விபத்து; பஸ் மோதியதில் 4 பேர் பலி; 25 பேர் படுகாயம்

மஹாராஷ்டிராவில் கோர விபத்து; பஸ் மோதியதில் 4 பேர் பலி; 25 பேர் படுகாயம்

மஹாராஷ்டிராவில் கோர விபத்து; பஸ் மோதியதில் 4 பேர் பலி; 25 பேர் படுகாயம்

2


ADDED : டிச 10, 2024 07:10 AM

Google News

ADDED : டிச 10, 2024 07:10 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை; மஹாராஷ்டிராவில் பஸ் மோதியதில் 4 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

குர்லா பகுதியில் இருந்து அந்தேரி பகுதிக்கு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சில், பெண்கள், குழந்தைகள் என பலரும் இருந்தனர். அம்பேத்கர் நகர் என்ற பகுதிக்கு வந்த போது எதிர்பாராத விதமாக தறிகெட்டு ஓடியது. அதிவேகத்தில் சென்ற பஸ், அங்குள்ள நடைபாதைவாசிகள் மீது மோதியது.

அப்போதும், வேகம் குறையாமல் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து தள்ளியது. பின்னர் அங்குள்ள குடியிருப்பு வளாகம் மீது மோதி நின்றது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 25 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீஸ் துணை கமிஷனர் கணேஷ் காவ்டே கூறியதாவது;

4 பேர் பலியாகிவிட்டனர். படுகாயம் அடைந்த 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். டிரைவரை கைது செய்துள்ளோம். விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் விபத்துக்கு பஸ்சில் பிரேக் பெயிலியரே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. பிரேக் பிடிக்காததால் பீதி அடைந்த டிரைவர், ஆக்சிலேட்டரை மிதித்து விட்டதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிகிறது.






      Dinamalar
      Follow us