sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தரிசன முன்பதிவுடன் பஸ் டிக்கெட் முன்பதிவு கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்

/

தரிசன முன்பதிவுடன் பஸ் டிக்கெட் முன்பதிவு கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்

தரிசன முன்பதிவுடன் பஸ் டிக்கெட் முன்பதிவு கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்

தரிசன முன்பதிவுடன் பஸ் டிக்கெட் முன்பதிவு கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்


ADDED : நவ 08, 2024 02:17 AM

Google News

ADDED : நவ 08, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை:சபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது பம்பைக்கான பஸ் டிக்கெட்டையும் முன்பதிவு செய்யலாம் என கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ் குமார் கூறியுள்ளார்.

சபரிமலையில் மண்டல காலம் நவ., 16-ல் தொடங்குகிறது. இதற்காக நவ., 15 மாலை நடைதிறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்து துறை சார்பில் வேகமாக செய்யப்பட்டு வருகிறது.

பத்தினம்திட்டையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதன் தலைவர் பிரசாந்த் கூறியதாவது: ஸ்பாட் புக்கிங் செய்ய வசதியாக சத்திரம் ( வண்டிப்பெரியாறு), எருமேலி, பம்பை ஆகிய மூன்று இடங்களில் கவுன்டர்கள் திறக்கப்படும். சீசனில் வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரீமியம் இல்லாமல் 5 லட்சம் ரூபாய் காப்பீடு வசதிக்கு தேவசம்போர்டு ஏற்பாடு செய்துள்ளது. சபரிமலை வரும் பக்தர்கள் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும்.

இந்தாண்டு சீசனில் 18 மணி நேரம் நடை திறந்திருக்கும். அதிகாலை 3:00 முதல் மதியம் 1:00 மணி வரையிலும், மதியம் 3:00 முதல் இரவு 11:00 மணி வரையும் நடை திறந்திருக்கும். நிலக்கல்லில் 2000 வாகனங்கள் கூடுதலாக பார்க்கிங் செய்ய வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. பம்பையில் பக்தர்கள் இளைப்பாற மூன்று நிரந்தர பந்தல்களும், இரண்டு தற்காலிக பந்தல்களும் கட்டப்பட்டுள்ளது.

காணிக்கையாக வரும் நாணயங்களை எண்ணுவதற்காக 100 தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். முக்கிய வழிபாட்டு பிரசாதமான அரவணை தற்போது ஆறு லட்சம் டின் ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது. மண்டல காலம் தொடங்கும் போது இது 45 லட்சமாக அதிகரிக்கும். சீசனில் ஒரு நாளில் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது பம்பைக்கு வந்து செல்வதற்கான பஸ் டிக்கெட்டையும் முன்பதிவு செய்யலாம் என கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ் குமார் கூறினார்.

அதுபோல 40 பேர் கொண்ட குழுக்கள் பத்து நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்தால் அவர்களுக்காக தனி பஸ் இயக்கப்படும். நிலக்கல் பம்பைக்கு இடையே அரை நிமிடத்திற்கு ஒரு பஸ் இயக்கப்படும் என்றும், 220 பஸ்கள் இதற்காக கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

உயர்நீதிமன்றம் உத்தரவு: இதற்கிடையில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று திருவிதாங்கோடு தேவசம்போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சன்னிதானம் மட்டுமல்லாமல் நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களிலும், சபரிமலை செல்லும் பாதைகளிலும் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளில் எந்த குறையும் இருக்கக் கூடாது என்றும், இதை தேவசம்போர்டு நிர்வாக அதிகாரி உறுதி செய்ய வேண்டும் என்றும், உதவிப் பொறியாளர்கள் அடிக்கடி இந்த வசதிகளை ஆய்வு செய்து நிர்வாகப் பொறியாளருக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us