ADDED : நவ 11, 2024 05:10 AM
கோலார்: கோலார் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்துகளில் காலியாக உள்ள 16 இடங்களுக்கான தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது.
இது குறித்து வெளியான தேர்தல் கால அட்டவணை:
வேட்புமனு தாக்கல் துவங்கி நடந்து வருகிறது.
தேர்தல் நடக்கும் கிராமங்களில் இம்மாதம் 26 வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். ஒவ்வொரு தாலுகாவிலும் தாசில்தார், தேர்தல் அதிகாரியாக இருப்பர்.
இடைத்தேர்தல் நடக்கும் கிராம பஞ்சாயத்துகள் விபரம்:
சீனிவாசப்பூர்:
பைரகானபள்ளி வார்டு எண் 1, ஹோதலி வார்டு எண் 17.
முல்பாகல்:
உத்தனூர் வார்டு எண் -11, ஹனுமனஹள்ளி வார்டு எண் -16, கும்பகல்லு வார்டு எண் -18, தாயலுார் வார்டு எண்- 25, தோலபள்ளி வார்டு எண் -27, சொன்னவாடி வார்டு எண் -29.
பங்கார்பேட்டை:
சின்ன கோட்டை வார்டு எண்- 10.
கோலார்:
அரஹள்ளி வார்டு எண் 9, கொண்ட ராஜன் ஹள்ளி வார்டு எண் -11, மார்ச்சு ஹம்பி வார்டு எண் -12, மதுவத்தி வார்டு எண்- 18, கேளனுார் வார்டு எண் -26.
மாலுார்:
ஜெயமங்களா வார்டு எண்: 22, தின்னஹள்ளி வார்டு எண்- 28.