sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெண் ஊழியரை மிரட்டி பலாத்காரம் கால் சென்டர் மேலாளர் கைது

/

பெண் ஊழியரை மிரட்டி பலாத்காரம் கால் சென்டர் மேலாளர் கைது

பெண் ஊழியரை மிரட்டி பலாத்காரம் கால் சென்டர் மேலாளர் கைது

பெண் ஊழியரை மிரட்டி பலாத்காரம் கால் சென்டர் மேலாளர் கைது


ADDED : ஜன 07, 2024 02:32 AM

Google News

ADDED : ஜன 07, 2024 02:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பசவேஸ்வராநகர் : விருந்துக்கு அழைத்துச் சென்று, பெண் ஊழியரை மிரட்டி பலாத்காரம் செய்த கால் சென்டர் மேலாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு கே.ஆர்., புரத்தைச் சேர்ந்தவர் சையது அக்ரம், 40. பசவேஸ்வராநகரில் உள்ள கால் சென்டர் நிறுவனத்தில், மேலாளராக பணியாற்றினார்.

இந்த நிறுவனத்தில் திருமணமான 32 வயது, பெண் ஊழியர் வேலை செய்கிறார்.

கடந்த 1ம் தேதி மதியம், புத்தாண்டு விருந்து அளிப்பதாக கூறி, பெண் ஊழியரை, சையது அக்ரம், பைக்கில் அழைத்துச் சென்றார்.

ஹோட்டலுக்கு செல்லாமல், வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து பெண் ஊழியரை மிரட்டி, பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து வெளியே கூறினால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். பயந்து போன பெண் ஊழியர், யாரிடமும் சொல்லாமல் இருந்து உள்ளார்.

அதன்பின்னர் தைரியத்தை வரவழைத்து, கணவரிடம் கூறி கதறி அழுதார்.

இதையடுத்து பெண்ணின் கணவர் சம்பவம் குறித்து, பசவேஸ்வராநகர் போலீசில் கடந்த 4ம் தேதி, புகார் அளித்தார். நேற்று முன்தினம் சையது அக்ரம் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us