sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜாதிவாரி அறிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

/

ஜாதிவாரி அறிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஜாதிவாரி அறிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஜாதிவாரி அறிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு


ADDED : மார் 01, 2024 06:30 AM

Google News

ADDED : மார் 01, 2024 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை பகிரங்கப்படுத்த கூடாது' என, அரசுக்கு உத்தரவிட கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சித்தராமையா முதன் முறையாக, 2013 - 18ல் முதல்வர் பதவி வகித்தபோது, பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையம் சார்பில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். இந்த ஆணையத்தின் அறிக்கை, நேற்று முதல்வர் சித்தராமையாவிடம் தாக்கல் செய்யப்பட்டது.

'இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்த கூடாது' என, அரசுக்கு உத்தரவிட கோரி, ஹாசன், ஹொளேநரசிபுராவை சேர்ந்த வக்கீல் ரகு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், 'ஜாதி வாரியான ஆய்வு நடத்த, பிற்படுத்தப்பட்ட ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. ஆணையத்தின் இன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டேவின் பதவிக்காலம், நேற்று முடிவடைந்தது. அவசர, அவசரமாக அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளார். முந்தைய தலைவர் தயாரித்த அறிக்கையை, இன்னாள் தலைவர் தாக்கல் செய்துள்ளார். இதை பகிரங்கப்படுத்த அனுமதிக்க கூடாது.

'கல்வி, பொருளாதாரம், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த, மத்திய அரசுக்கு மட்டுமே, அதிகாரம் உள்ளது. அறிக்கையை சட்டவிரோதமானது என, அறிவிக்க வேண்டும்' என கோரியுள்ளார்.

மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.






      Dinamalar
      Follow us