sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டாக்டரிடம் ரூ.1 கோடி மோசடி  ஐஸ்வர்யா கவுடா மீது வழக்கு 

/

டாக்டரிடம் ரூ.1 கோடி மோசடி  ஐஸ்வர்யா கவுடா மீது வழக்கு 

டாக்டரிடம் ரூ.1 கோடி மோசடி  ஐஸ்வர்யா கவுடா மீது வழக்கு 

டாக்டரிடம் ரூ.1 கோடி மோசடி  ஐஸ்வர்யா கவுடா மீது வழக்கு 


ADDED : ஜன 20, 2025 06:53 AM

Google News

ADDED : ஜன 20, 2025 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.ஆர்.நகர்:

டாக்டரிடம் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக, ஐஸ்வர்யா கவுடா மீது வழக்கு பதிவாகி

உள்ளது.பெங்களூரு ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் ஐஸ்வர்யா கவுடா. காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி, சந்திரா லே- அவுட்டில் உள்ள, நகைக்கடையில் 8 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஐஸ்வர்யா மீது சந்திரா லே - அவுட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் ஜாமினில் வெளியே உள்ளார்.பெண் டாக்டர் ஒருவரிடம் 2.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஆர்.ஆர்., போலீஸ் நிலையத்தில் ஐஸ்வர்யா மீது இரண்டாவது வழக்கு பதிவானது. மேலும், மாண்டியாவை சேர்ந்த தம்பதியிடம் ௧ கோடி ரூபாய் மோசடி செய்ததாக, மாண்டியா டவுன் போலீஸ் நிலையத்தில் மூன்றாவது வழக்கு பதிவானது. இரண்டாவது, மூன்றாவது வழக்கின் விசாரணைக்கு ஆஜராகி ஐஸ்வர்யா விளக்கம் அளித்தார்.இந்நிலையில், டாக்டரான தயானந்தா லிங்ககவுடா என்பவர், ஐஸ்வர்யா மீது ஆர்.ஆர்.நகர் போலீசில் அளித்த புகாரில், 'காங்கிரஸ் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி என்னிடம் ஐஸ்வர்யா பேசினார்.நாங்கள் ஒரு நிறுவனத்தை திறந்து உள்ளோம். இந்த நிறுவனத்தில் நீங்கள் பணம் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறினார். இதை நம்பி 1 கோடி ரூபாய் பணம் முதலீடு செய்தேன். ஆனால் எனக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. பணத்தை திரும்ப தரும்படி கேட்டால் ஐஸ்வர்யா எனக்கு மிரட்டல் விடுகிறார்' என்று புகாரில் கூறப்பட்டிருந்தது. வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us