sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போலி ஆவணங்களால் ஜாமின் கிடைக்க உதவியவர் மீது வழக்கு

/

போலி ஆவணங்களால் ஜாமின் கிடைக்க உதவியவர் மீது வழக்கு

போலி ஆவணங்களால் ஜாமின் கிடைக்க உதவியவர் மீது வழக்கு

போலி ஆவணங்களால் ஜாமின் கிடைக்க உதவியவர் மீது வழக்கு


ADDED : ஜன 30, 2025 11:49 PM

Google News

ADDED : ஜன 30, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிவமொக்கா; போலி ஆவணங்களை உருவாக்கி, ஷிவமொக்கா நீதிமன்றத்தில் ஐந்து பேருக்கு ஜாமின் கிடைக்க உதவியவர் மீது, வழக்கு பதிவாகியுள்ளது.

குற்ற வழக்கு தொடர்பாக, இப்ராகிம் கலீல், பைரோஜ், அர்பாஜ், நயாஜ் அகமது, சுஹேல் ஆகியோர் ஷிவமொக்கா சிறையில் அடைபட்டிருந்தனர்.

சில மாதங்களுக்கு முன், இவர்களுக்கு சித்ரதுர்கா, ஹொலல்கெரேவை சேர்ந்த ஜெகதீஷ் உத்தரவாதம் கொடுத்து, ஜாமின் பெற்றார்.

ஜாமினில் வந்த ஐவரில், நால்வர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் சுஹேல் ஆஜராகவில்லை.

எனவே உத்தரவாதம் அளித்த ஜெகதீஷுக்கு, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதன்படி நேற்று ஷிவமொக்கா நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார்.

அவர், 'நான் யாருக்கும் ஜாமின் அளிக்கவில்லை. பிரமாண பத்திரத்தில் உள்ள போட்டோ, என்னுடையது இல்லை.

குற்றவாளிகள் எனக்கு அறிமுகம் இல்லை' என விவரித்தார். அவரது பெயரில் போலி ஆவணங்களை உருவாக்கி, கைதிகளுக்கு ஜாமின் கொடுத்திருப்பது தெரிந்தது.

இதை தீவிரமாக கருதிய நீதிமன்றம், போலி நபரை கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டது.

ஷிவமொக்காவின், ஜெயநகர் போலீசாரும் அந்நபர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us