sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜாதிவாரி கணக்கெடுப்பு; நீதிமன்றம் தலையிட முடியாது என்கிறது சுப்ரீம் கோர்ட்

/

ஜாதிவாரி கணக்கெடுப்பு; நீதிமன்றம் தலையிட முடியாது என்கிறது சுப்ரீம் கோர்ட்

ஜாதிவாரி கணக்கெடுப்பு; நீதிமன்றம் தலையிட முடியாது என்கிறது சுப்ரீம் கோர்ட்

ஜாதிவாரி கணக்கெடுப்பு; நீதிமன்றம் தலையிட முடியாது என்கிறது சுப்ரீம் கோர்ட்

3


ADDED : செப் 02, 2024 01:14 PM

Google News

ADDED : செப் 02, 2024 01:14 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது மத்திய அரசின் அதிகார எல்லைக்குட்பட்டது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது' எனக் கூறி பொது நல மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல், காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். சில ஆண்டுக்கு முன் பீஹார் மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. தகவல்கள் அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டன.

உடனே தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பா.ம.க., தலைவர் அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்தனர். இந்நிலையில், மத்திய அரசை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்று (செப்.,02) நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்., பாட்டி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

நாங்க தலையிடமாட்டோம்!

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், 'ஜாதிவாரி கணக்கெடுப்பை அவ்வப்போது நடத்த வேண்டும் என இந்திரா சகானி தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என வாதிட்டார். வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், ' ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது மத்திய அரசின் அதிகார எல்லைக்குட்பட்டது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது' எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us