sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை விரைவில் தாக்கல்

/

ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை விரைவில் தாக்கல்

ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை விரைவில் தாக்கல்

ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை விரைவில் தாக்கல்


ADDED : ஜன 25, 2024 07:00 AM

Google News

ADDED : ஜன 25, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : ''ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை, இம்மாதம் இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும்,'' என, பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணைய தலைவர் ஜெய பிரகாஷ் ஹெக்டே தெரிவித்தார்.

இதுதொடர்பாக, பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:

ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை, ஜனவரி 31க்குள் தாக்கல் செய்வோம். இடைக்கால அறிக்கை என்ற குழப்பங்களுக்கு இடமளிக்காமல், முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்படும். வரும் 31ல் என் தலைவர் பதவிக் காலம் முடிகிறது.

அறிக்கையில் உள்ள அம்சங்களை பகிரங்கப்படுத்த முடியாது. தற்போது அறிக்கை, புத்தகமாக அச்சிடும் பணி நடக்கிறது. அது தயாரான பின், முதல்வர் சித்தராமையாவிடம் நேரம் கேட்போம்.

அவர் நேரம் நிர்ணயித்த பின், அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதை ஜாதி வாரி கணக்கெடுப்பு என்றோ, காந்தராஜு அல்லது ஜெயபிரகாஷ் ஹெக்டே அறிக்கை என்றோ கருத வேண்டியதில்லை.

பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட சமூக, கல்வி மற்றும் பொருளாதார ஆய்வாக இருக்கும். அரசிடம் அறிக்கை தாக்கல் செய்த பின், இது பற்றி அமைச்சரவையில் விவாதித்து, சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us