sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுபரிசு!

/

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுபரிசு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுபரிசு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுபரிசு!

3


ADDED : அக் 17, 2024 02:41 AM

Google News

ADDED : அக் 17, 2024 02:41 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மேலும், கோதுமை, உள்ளிட்ட ஆறு பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.

இதில், வேளாண் துறை, உட்கட்டமைப்பு மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஆகிய விஷயங்களில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து, மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

வேளாண் விளைபொருட்களுக்கான செலவு மற்றும் விலை ஆணையம், ராபி சீசனில் ஆறு பயிர்களுக்கான விலையை பரிந்துரைத்திருந்தது.

அதை ஏற்று 2025 -- 26 ராபி பயிர்கள் சந்தைப்படுத்துதல் காலத்தில் ஆறு பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி கோதுமைக்கான விலை குவின்டாலுக்கு 150 ரூபாய் உயர்த்தி, 2,425 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பார்லி பயிருக்கான விலை 130 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,980 ரூபாயாகவும், கொண்டைக்கடலைக்கான விலை 210 ரூபாய் உயர்த்தப்பட்டு 5,650 ரூபாயாகவும், மசூர் பருப்புக்கான விலை 275 ரூபாய் உயர்த்தப்பட்டு 6,700 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடுகுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை இதுவரை இல்லாத அளவு குவின்டாலுக்கு 300 ரூபாய் உயர்த்தப்பட்டு 5,950 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராபி பருவ பயிர்கள் இந்த விலையின்படி கொள்முதல் செய்யப்படும். கடந்த 10 ஆண்டுகளில் ராபி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை, ஒன்று முதல் இரு மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்பு துறையில் முக்கிய முடிவாக, வாரணாசியில் கங்கை நதியின் குறுக்கே 2,642 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில் மற்றும் சாலை வசதியுடன் கூடிய இரண்டடுக்கு பாலம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் அடுக்கில் நான்கு வழி ரயில் பாதையும், மேலடுக்கில் ஆறு வழி சாலையும் அமைய உள்ளன. இந்த பாலம் வளர்ந்து வரும் சுற்றுலா மற்றும் தொழில் துறை தேவைகளை பூர்த்தி செய்யும்.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மூன்றாவது முக்கிய முடிவாக, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இது ஜூலை மாதம் முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். 12 மாத விலைவாசி உயர்வை கணக்கில் வைத்து, ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 3 சதவீத உயர்வின் காரணமாக 45 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதன் வாயிலாக 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர். இதனால், அரசுக்கு 9,448 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us