sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திருப்பதி நெரிசல் விபத்து: விசாரணை முடிவை திரும்ப பெற்றது மத்திய அரசு

/

திருப்பதி நெரிசல் விபத்து: விசாரணை முடிவை திரும்ப பெற்றது மத்திய அரசு

திருப்பதி நெரிசல் விபத்து: விசாரணை முடிவை திரும்ப பெற்றது மத்திய அரசு

திருப்பதி நெரிசல் விபத்து: விசாரணை முடிவை திரும்ப பெற்றது மத்திய அரசு

9


ADDED : ஜன 20, 2025 12:46 AM

Google News

ADDED : ஜன 20, 2025 12:46 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்த விவகாரத்தில், நேரடி விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பல்வேறு எதிர்ப்பால் அந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

ஆந்திராவின் திருப்பதி - திருமலையில் உள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோவிலுக்கு, உலகம் முழுதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் தரிசனத்துக்கான இலவச டிக்கெட், திருப்பதியில் பல்வேறு மையங்களில் வினியோகிக்க கடந்த 9ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதை வாங்க, 8ம் தேதி காலை முதலே, சிறப்பு கவுன்டர்கள் முன் ஏராளமானோர் குவியத் துவங்கினர். இதில், சீனிவாசம் கவுன்டரில் கட்டுக்கடங்காமல் திரண்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் பலியாகினர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அதேபோல், திருமலையில் உள்ள லட்டு கவுன்டரில், மின்கசிவு காரணமாக கடந்த 13ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் நேரடி விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்காக, மத்திய உள்துறை அமைச்சக கூடுதல் செயலர் சஞ்சீவ் குமார் ஜின்டால் நியமிக்கப்பட்டார்.

இவர், நேற்றும், இன்றும் திருமலை மற்றும் திருப்பதியில் விபத்து நடந்த பகுதியில் விசாரணை நடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தான விவகாரங்களில், மத்திய அரசின் தலையீடு முன்னெப்போதும் இல்லாத அளவு உள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இதையடுத்து, நேரடி ஆய்வு விசாரணையை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. சஞ்சீவ் குமார் ஜின்டாலின் வருகை ரத்து செய்வது குறித்த தகவலை, தேவஸ்தான அதிகாரிகளுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.






      Dinamalar
      Follow us