sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய இணையதளம்: ஜூன் 6ல் தொடங்க மத்திய அரசு முடிவு

/

வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய இணையதளம்: ஜூன் 6ல் தொடங்க மத்திய அரசு முடிவு

வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய இணையதளம்: ஜூன் 6ல் தொடங்க மத்திய அரசு முடிவு

வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய இணையதளம்: ஜூன் 6ல் தொடங்க மத்திய அரசு முடிவு

4


ADDED : ஜூன் 03, 2025 08:55 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 08:55 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வக்ப் சொத்துக்களை பதிவு செய்வதற்காக, இணையதளத்தை (வக்ப் சொத்து மேலாண்மைக்கான உமீத் போர்டல்) ஜூன் 6ம் தேதி மத்திய அரசு தொடங்க உள்ளது.

வக்ப் போர்டு சொத்து தொடர்பாக பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்திற்கு எதிராக, காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், ஏராளமான முஸ்லிம் அமைப்புகள் என, 100க்கும் அதிகமான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விவாதம் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில், வக்ப் சொத்துக்களை பதிவு செய்வதற்காக, இணையதளத்தை (வக்ப் சொத்து மேலாண்மைக்கான உமீத் போர்டல்) ஜூன் 6ம் தேதி மத்திய அரசு தொடங்க உள்ளது.

இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

* நாடு முழுவதும் உள்ள வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய, இந்த இணையதளம் தொடங்கப்படுகிறது.

* அனைத்து வக்ப் சொத்துக்களும் 6 மாதங்களுக்குள் விரிவான தகவலுடன் பதிவு செய்யப்பட வேண்டும்.

* சலுகைக் காலத்திற்குப் பிறகு பதிவு செய்யப்படாத சொத்துக்கள் சர்ச்சைக்குரியதாக கருதப்படும்.

* சொத்துக்களின் நீளம், அகலம் மற்றும் புவிசார் குறிச்சொற்கள் கொண்ட இடங்கள் உள்ளிட்ட விரிவான விளக்கங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வக்ப் திருத்த சட்ட மசோதா பார்லிமென்டில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சமீபத்தில், இந்த மசோதாவுக்கு திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில், வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய போர்டல் தொடங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us