உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை பரிந்துரைத்தார் சந்திரசூட்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை பரிந்துரைத்தார் சந்திரசூட்
ADDED : அக் 17, 2024 03:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை பரிந்துரைத்தார். ஒய்வு பெற உள்ள தலைமை நீதிபதி சந்திரசூட்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் சந்திரசூட் பதவியேற்றார். இவரது பதவி காலம் நிறைவடையதையடுத்து வரும் நவ.10-ம் தேதி பணிநிறைவு பெறுகிறார்.
இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை நேற்று பரிந்துரை செய்தார். சஞ்சீவ் கண்ணா, கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
வரும் நவ.10-ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று இப்பதவியில் 2025ம் ஆண்டு மே மாதம் வரை இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.