sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லஷ்கர் பயங்கரவாதிகள் 8 பேர் மீது குற்றப்பத்திரிகை

/

லஷ்கர் பயங்கரவாதிகள் 8 பேர் மீது குற்றப்பத்திரிகை

லஷ்கர் பயங்கரவாதிகள் 8 பேர் மீது குற்றப்பத்திரிகை

லஷ்கர் பயங்கரவாதிகள் 8 பேர் மீது குற்றப்பத்திரிகை


ADDED : ஜன 14, 2024 12:24 AM

Google News

ADDED : ஜன 14, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் வாடகை வீட்டில் சந்தேகப்படும்படியாக வசித்த ஐந்து பேரை, கடந்த ஆண்டு ஜூலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து, ஏழு நாட்டு துப்பாக்கிகள், 45 துப்பாக்கி குண்டுகள், வாக்கி டாக்கிகள், 12 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், இவர்களுக்கு லஷ்கர் - இ - தொய்பா என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிந்தது.

இந்த வழக்கு என்.ஐ.ஏ., விசாரணைக்கு மாற்றப்பட்டது. பெங்களூரில் 2008ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள, கேரளாவின் நசீர், இவர்களுக்கு தலைவராக செயல்பட்டது தெரிய வந்தது.

தவிர வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஜுனைத் அகமது, சல்மான் கான் ஆகியோருக்கும் சதித்திட்டத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இவர்கள் எட்டு பேர் மீதும், பெங்களூரு என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

குற்றப்பத்திரிகையில் நசீர் கூறியதால், பெங்களூரில் பல இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஏழு பேரும் திட்டம் தீட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us