பலாத்கார வழக்கில் காங்., எம்.எல்.ஏ., மீது குற்றப்பத்திரிகை
பலாத்கார வழக்கில் காங்., எம்.எல்.ஏ., மீது குற்றப்பத்திரிகை
ADDED : மே 22, 2024 09:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்: பாலியல் வழக்கில் கேரளா மாநில காங். எம்.எல்.ஏ., குன்னப்பிள்ளி மீது கீழ் கோர்ட் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கேரளா மாநிலம் பெரும்பாவூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., எல்தோஸ் குன்னப்பிள்ளி, இவர் 2022-ம் ஆண்டு பெண் ஒருவரை பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நெய்யாற்றின்கரா கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று குற்றப்பிரிவு போலீசார் எம்.எல்.ஏ., எல்தோஸ் குன்னப்பிள்ளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

