sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 கர்நாடக ஓட்டு திருட்டு வழக்கில் அதிரடி பா.ஜ.,வினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

/

 கர்நாடக ஓட்டு திருட்டு வழக்கில் அதிரடி பா.ஜ.,வினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

 கர்நாடக ஓட்டு திருட்டு வழக்கில் அதிரடி பா.ஜ.,வினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

 கர்நாடக ஓட்டு திருட்டு வழக்கில் அதிரடி பா.ஜ.,வினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்


ADDED : டிச 14, 2025 03:56 AM

Google News

ADDED : டிச 14, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவில், 2023 சட்டசபை தேர்தலில் நடந்த ஓட்டு திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்திய எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவினர், 22,000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அதில், பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சுபாஷ் குத்தேதார், அவரது மகன் உள்ளிட்டோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், '2024 லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு வர வேண்டிய ஓட்டுகளை திருடி, பா.ஜ., ஆட்சிக்கு வந்தது' என, சில மாதங்களுக்கு முன் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து, கர்நாடகாவில் 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஆலந்த் சட்டசபை தொகுதியிலும் ஓட்டுகளை திருடி தன்னை தோற்கடிக்க பா.ஜ., முயற்சித்ததாக, காங்கிரசைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,வான பி.ஆர்.பாட்டீல் குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., அரசு, ஆலந்த் தொகுதியில் நடந்த ஓட்டு திருட்டு தொடர்பாக விசாரணை நடத்த சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி.,யான பி.கே.சிங் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. குழுவினரும் ஆலந்த் தொகுதியில் விசாரணை நடத்தினர்; பல இடங்களில் சோதனை நடத்தி ஆதாரங்களை திரட்டினர்.

விசாரணையை முடித்த எஸ்.ஐ.டி., அதிகாரிகள், 22,000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை, பெங்களூரு நகரின், ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தனர்.

அதில், ஆலந்த் தொகுதியின் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சுபாஷ் குத்தேதார், அவரது மகன் ஹர்ஷானந்தா குத்தேதார் உட்பட, ஏழு பேருக்கு ஓட்டு திருட்டில் தொடர்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us