ADDED : பிப் 06, 2026 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனேஸ்வர்: சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரிக்கு பயணியர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று புறப்பட்டது. ஒடிஷாவின் ஜாஜ்புர் மாவட்டத்தில் உள்ள ஜகபுரா ரயில் நிலையம் அருகே, காலை 8:51 மணிக்கு வந்த போது, ரயிலின் மூன்று பெட்டிகள் திடீரென தடம் புரண்டன.
ஒரு 'ஏசி' பெட்டி மற்றும் இரு பொது பெட்டிகள் தடம் புரண்டது. தகவ லறிந்து மீட்புப் படையினர் விரைந்து வந்து, தடம் புரண்ட பெட்டிகளை சீரமைத்தனர்.
பின், சில மணி நேர தாமதத்துக்கு பின் ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. ரயில் தடம் புரண்ட போது மெதுவாக சென்றதால் பயணியருக்கு காயம் ஏற்படவில்லை. இது குறித்து விசாரணை நடக்கிறது.

