ADDED : ஜன 19, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு:சென்னை சோழிங்கநல்லுாரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சங்கர் 44, உள்பட 19 பேர் குழுவாக மூணாறுக்கு சுற்றுலா வந்தனர்.
பள்ளிவாசல் எஸ்டேட் இரண்டாம் மைல் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கினர். அங்கு அறையில் சங்கர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். அவர், இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாக உடன் வந்தவர்கள் கூறினர். வெள்ளத்தூவல் போலீசார் விசாரிக்கின்றனர்.

