sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2026 மார்ச்சுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும்: அடித்துச் சொல்கிறார் அமித் ஷா

/

2026 மார்ச்சுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும்: அடித்துச் சொல்கிறார் அமித் ஷா

2026 மார்ச்சுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும்: அடித்துச் சொல்கிறார் அமித் ஷா

2026 மார்ச்சுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும்: அடித்துச் சொல்கிறார் அமித் ஷா

3


ADDED : செப் 20, 2024 01:27 PM

Google News

ADDED : செப் 20, 2024 01:27 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராய்ப்பூர்: 'வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட 55 பேரிடம் அமித்ஷா பேசியதாவது: வன்முறையை கைவிட்டு, மாவோயிஸ்டுகள் சரண் அடைய வேண்டும். நாட்டில் நக்சலைட் தாக்குதல் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் முடிவுக்கு கொண்டு வரப்படும். இல்லையென்றால் அதற்கு முன்னதாகவே, நக்சலைட் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளனர்.

வன்முறை

ஒரு காலத்தில் சத்தீஸ்கரில் பல்வேறு மாவட்டங்களில் நக்சலைட் தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. தற்போது, நான்கு மாவட்டங்களில் மட்டுமே சில நேரங்களில் நக்சலைட் தாக்குதல்கள் நடக்கிறது. சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாநில அரசுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் ஒரு நலத்திட்டத்தை விரைவில் வெளியிடுவோம். வேலைவாய்ப்புகள், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் நடவடிக்கைகள் எடுப்பதில் கவனம் செலுத்தி மக்களுக்கு நாங்கள் உதவுவோம்.

நடவடிக்கை

பாதுகாப்புப் படைகள் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர், இந்த ஆண்டு பாதுகாப்புப் படையினரின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் 164 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். எங்களது போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று நான் நம்புகிறேன். ஏற்கனவே ஏற்பட்ட சேதத்தை என்னால் திரும்ப பெற முடியாது. ஆனால் அப்பாவி மக்கள் நக்சலைட் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்த முயற்சிப்பேன். கடந்த காங்கிஸ் ஆட்சியின் போது 6,617 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். இப்போது 70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.






      Dinamalar
      Follow us