sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 வரும் 25ல் தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் கமிஷனர்

/

 வரும் 25ல் தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் கமிஷனர்

 வரும் 25ல் தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் கமிஷனர்

 வரும் 25ல் தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் கமிஷனர்


ADDED : பிப் 21, 2026 06:31 AM

Google News

ADDED : பிப் 21, 2026 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, வரும் 25ல், தமிழகத்துக்கு தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா , மேற்கு வங்கம் மற்றும் அசாமில், வரும் ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், ஜூன் 15ல் சட்டசபையின் பதவிக்காலம் முடி வடைகிறது. மற்ற மாநிலங் களில், மே மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகிறது.

வடகிழக்கு மாநிலமான அசாமுக்கு, சமீபத்தில் சென்ற தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழுவினர், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அடுத்த கட்டமாக, தமிழகம், புதுச்சேரிக்கு வர திட்டமிட்டு உள்ளனர்.

இரு மாநிலங்களிலும், வரும் 25 - 27 பயணம் மேற்கொள்ளும் குழுவினர், தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளனர். மேலும், அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளனர்.

தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரலில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அசாம், மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாக நடக்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மார்ச் இரண்டாவது வாரத்தில் வெளியாகிறது.






      Dinamalar
      Follow us