sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

யமுனையில் கழிவுநீர் தேர்தல் ஆணையத்தில் முதல்வர்கள் முறையீடு

/

யமுனையில் கழிவுநீர் தேர்தல் ஆணையத்தில் முதல்வர்கள் முறையீடு

யமுனையில் கழிவுநீர் தேர்தல் ஆணையத்தில் முதல்வர்கள் முறையீடு

யமுனையில் கழிவுநீர் தேர்தல் ஆணையத்தில் முதல்வர்கள் முறையீடு


ADDED : ஜன 28, 2025 08:04 PM

Google News

ADDED : ஜன 28, 2025 08:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:டில்லி முதல்வர் ஆதிஷி மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர், தேர்தல் ஆணையத்தில் நேற்று, ஹரியானா பா.ஜ., அரசு திட்டமிட்டே யமுனை ஆற்றில் தொழிற்சாலை கழிவுநீரை கலப்பதால், டில்லியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது என புகார் தெரிவித்தனர்.

சந்திப்புக்குப் பின், நிருபர்களிடம் ஆதிஷி கூறியதாவது:

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைச் சந்தித்தோம். யமுனை நதி நீரில் அமோனியா அளவு 7 பி.பி.எம்., ஆக உயர்ந்துள்ளதை சுட்டுக் காட்டினோன். இதனால் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முடங்கிக் கிடக்கின்றன. டில்லி சட்டசபைத் தேர்தலில் குறுக்கு வழிகளில் வெற்றி பெற பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

அதற்காகவே, யமுனை நதி நீரில் தொழிற்சாலை கழிவு நீரை ஹரியானா அரசு கலக்கிறது. இந்த விவரங்களை ஆதாரத்துடன் அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். தேர்தல் ஆணையத்தை சுதந்திரமான மற்றும் நியாயமான அமைப்பு என இதுவரை நம்புகிறோம். இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கிறோம். அதேபோல, முனாக் கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கோரியும் வேண்டுகோள் விடுத்துள்ளோம். கடந்த ஆண்டு அமோனியா அளவையும் இந்த ஆண்டு அளவையும் தேர்தல் ஆணையம் மதிப்பாய்வு செய்யும். அதன்பின், நடவடிக்கை எடுப்பர் என நினைக்கிறோம்.

அண்டை மாநிலமான ஹரியானாவில் இருந்து டில்லிக்குள் நுழையும் இடத்தில் யமுனை நதி நீரில் அமோனியா அளவு இயல்பை விட ஆறு மடங்கு அதிகமாக இருக்கிறது. நச்சுத் தன்மை கொண்ட இந்த நீரைப் பயன்படுத்தினால் உடல்நலக் கேடு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையத்துக்கு நேற்று முன் தினம் ஆதிஷி சிங் கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில், நேற்று காலை அனுப்பிய கடிதத்தில், ஆணைய அதிகாரிகளை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார். அதற்கு ஒப்புக் கொண்ட ஆணையம் நேற்று மாலை 4:00 மணிக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை சந்திக்க அனுமதி வழங்கியது.

ஏற்கனவே, ஆம் ஆத்மியில் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்குமாறு ஹரியானா அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வீண்பழி!

ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி கூறியதாவது:ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. தன் சொந்த குறைகளை மறைக்க மற்றவர்களைக் குறை கூறுவது ஆத் ஆத்மி கட்சியின் வழக்கம். அபாண்ட குற்றச்சாட்டைக் கூறியதற்காக, அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும். இலையென்றால், ஆம் ஆத்மி மீது ஹரியானா அரசு அவதூறு வழக்கு தொடுக்கும். ஹரியானா மக்கள் யமுனையை புனித நதியாக வழிபடுகின்றனர். அப்படிப்பட்ட நதியில் ஏன் விஷத்தைக் கலக்கிறோம். டில்லியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிப்பு திறன் குறைந்து விட்டது. அதனால்தான் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதை மறைத்து யமுனை நதி நீரின் தரம் பற்றி பா.ஜ., மீது வீண் பழி சுமத்துகின்றனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



பயபட்ட மாட்டேன்!


ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:சட்ட நடவடிக்கைக்கு நான் பயப்பட மாட்டேன். அதற்கான டில்லி மக்களுக்கு நச்சு கலந்த நீரை வழங்க விட மாட்டேன். டில்லி ஜல் போர்டு தலைமை நிர்வாக அதிகாரி அனுப்பியுள்ள கடிதத்தில், ஹரியானாவில் இருந்து யமுனையில் திறந்து விடப்படும் நீரில் அமோனியா என்ற நச்சு அதிகளவு கலந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் ஹரியானா முதல்வர் அரசியல் செய்ய வேண்டாம். நச்சு கலந்த நீரை மக்களுக்கு வழங்குவது பாவம். இதில் அரசியல் செய்தால், மக்களின் சாபத்துக்கு ஆளாக நேரிடும்.இவ்வாறு அவர் கூறினார்.



ஆதாரம் இல்லை!


டில்லி ஜல் போர்டு தலைமை நிர்வாக் அதிகாரி ஷில்பா ஷிண்டே, டில்லி தலைமைச் செயலர் தர்மேந்திராவுக்கு நேற்று முன் தினம் அனுப்பிய கடிதத்தில், “முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறும் குற்றச்சாட்டு தவறானது. அடிப்படை ஆதாரம் அற்றாது. ஜல்போர்டு, யமுனை நீரின் தரத்தை தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்ப சுத்திகரிப்பு செயல்முறை சரிசெய்யப்படுகிறது. குளிர்காலத்தில் நதி நீர் ஓட்டம் குறைவதாலும், சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவுநீர் நதியின் மேற்பகுதியில் கலப்பதாலும் அமோனியா அளவு சற்று அதிகரித்துள்ளது,”என, கூறியுள்ளார்.



தண்டிக்க வேண்டும்!


டில்லி காங்கிரஸ் தலைவரும், பத்லி தொகுதி வேட்பாளருமான தேவேந்தர் யாதவ், “எங்கள் கேள்வியும் யமுனை நதி நீரைப் பற்றியதுதான். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவால் இதுவரை யமுனை நதியை ஏன் சுத்தம் செய்யவில்லை. தன் தவறை மறைக்க ஹரியானா அரசு மீது பழியைப் போடுவது ஏன்? யமுனை நதி நீர் மாசு அடைந்ததற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்,”என்றார்.



விரைவில் விடுதலை!


மங்கோல்புரி தொகுதியில் நடந்த பா.ஜ., தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும்போது, “காஜியாபாத்தில் இருந்து டில்லி வரும்போது, யமுனை நதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதைப் பார்த்து வேதனை அடைந்தேன். புனித நதியான கருதும் யமுனையை சாக்கடை போல் மாற்றி விட்டனர். டில்லியில் ஆம் ஆத்மி அரசின் பாவச்செயல்களால் அவதிப்படும் மக்கள் விரைவில் விடுதலை அடைவர். அதற்கு ஒரே வழி, தேர்தலில் டில்லி மக்கள் பா.ஜ.,வை தேர்ந்தெடுப்பது மட்டுமே,”என்றார்.








      Dinamalar
      Follow us