sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முதல்வரின் அரசு இல்ல ஒதுக்கீடு ரத்து: அதிஷி குற்றச்சாட்டு

/

முதல்வரின் அரசு இல்ல ஒதுக்கீடு ரத்து: அதிஷி குற்றச்சாட்டு

முதல்வரின் அரசு இல்ல ஒதுக்கீடு ரத்து: அதிஷி குற்றச்சாட்டு

முதல்வரின் அரசு இல்ல ஒதுக்கீடு ரத்து: அதிஷி குற்றச்சாட்டு

4


ADDED : ஜன 07, 2025 10:12 PM

Google News

ADDED : ஜன 07, 2025 10:12 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மத்திய அரசு தனக்கான வீடு ஒதுக்கீட்டை மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக ரத்து செய்துள்ளது என்று டில்லி முதல்வர் அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அதிஷி கூறியதாவது:

டில்லி பேரவைக்கான தேர்தல் இன்று தான் அறிவிக்கப்பட்டது. மூன்று மாதத்தில் இரண்டாவது முறையாக நேற்றிரவே மத்திய பா.ஜ., அரசு என்னை அதிகாரபூர்வ முதல்வர் இல்லத்தில் இருந்து வெளியேற்றிவிட்டது. அவர்கள் கடிதத்தின் மூலமாக முதல்வருக்கான இல்ல ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் இல்லத்தைப் பறித்துக்கொண்டனர்.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பா.ஜ., என்னையும் குடும்பத்தையும் குறிவைக்கிறார்கள். எங்கள் வேலையை நிறுத்தலாம். ஆனால் டில்லி மக்களுக்காக உழைக்கும் எங்கள் ஆர்வத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

இங்குள்ள ஒவ்வொரு பெண்ணும் மகிளா சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 2,100 பெறுவதை உறுதி செய்வேன். ஒவ்வொரு அர்ச்சகரும் ரூ. 18,000 கவுரவ ஊதியம் பெறுவார்கள் என்றார்.

அதிஷியின் குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ.,தலைவர் அமித் மாளவியா கூறுகையில்,

அரவிந்த் கெஜ்ரிவாலை புண்படுத்த விரும்பவில்லை என்பதால், 6 பிளாக் ஸ்டாப் ரோட்டில் உள்ள குடியிருப்பை முதல்வர் அதிஷி குடியேற மறுத்ததால், அந்த வீட்டுக்கான ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. டில்லி முதல்வர் பொய் சொல்கிறார். அவருக்கு 11-அக்டோபர்-2024 அன்று ஷீஷ்மஹால் ஒதுக்கப்பட்டது. கெஜ்ரிவாலை புண்படுத்த விரும்பாததால் அவர் இன்னும் அங்கு செல்லவில்லை. எனவே, ஒதுக்கீடு திரும்பப் பெறப்பட்டது, மேலும் இரண்டு பங்களாக்கள் அதற்கு பதிலாக அவருக்கு வழங்கப்பட்டது.

பொதுப்பணித் துறையினரின் ஆதாரங்களின் படி, முதல்வராக அதிஷி பதவி ஏற்ற ஒருவார காலத்துக்குள் அவர் முதல்வர் இல்லத்தில் குடியேற வேண்டும். ஆனால், மூன்று மாதங்களாகியும் அவர் அதைச் செய்யவில்லை அதனால் அவருக்கான வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டள்ளது.

இவ்வாறு அமித் மாளவியா கூறினார்.






      Dinamalar
      Follow us