sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'டே கேர்' 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி

/

'டே கேர்' 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி

'டே கேர்' 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி

'டே கேர்' 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி


ADDED : ஜன 27, 2024 12:18 AM

Google News

ADDED : ஜன 27, 2024 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹென்னுார் -'டே கேர்' மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த, 4 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தது.

கேரளாவை சேர்ந்தவர் ஜிட்டோ டாமி ஜோசப். இவரது மனைவி பினிடோ தாமஸ். பெங்களூரில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்கின்றனர்.

ஹென்னுாரில் வசிக்கின்றனர். இந்த தம்பதியின் மகள் ஜியானா ஆனோ, 4. கல்யாண் நகர் செல்லிகெரேயில் உள்ள 'டே கேர்' எனும் குழந்தைகளை பராமரிக்கும் மையத்தில் ஜியானாவை அவளது பெற்றோர் விட்டுச் செல்வது வழக்கம்.

கடந்த 22ம் தேதி மையத்தின் மூன்றாவது மாடியில் இருந்து, ஜியானா தவறி விழுந்தாள். தலையில் பலத்த காயம் அடைந்த குழந்தையை டே கேர் நிர்வாகத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. 24 மணி நேர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று காலை ஜியானா இறந்தாள்.

ஜியானா மாடியில் இருந்து விழுந்து, அரைமணி நேரத்திற்கு மேலாக அவளை யாரும் பார்க்கவில்லை என்பதும், ஜியானா விளையாடும்போது, சுவரில் தலை மோதி, குழந்தை காயம் அடைந்ததாக டே கேர் நிர்வாகம் பொய் கூறியதும், போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. நிர்வாகம் மீது, இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us