sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உலக அரசியலில் முக்கிய தலைவர்; பிரதமர் மோடிக்கு சிலி அதிபர் போரிக் பாராட்டு

/

உலக அரசியலில் முக்கிய தலைவர்; பிரதமர் மோடிக்கு சிலி அதிபர் போரிக் பாராட்டு

உலக அரசியலில் முக்கிய தலைவர்; பிரதமர் மோடிக்கு சிலி அதிபர் போரிக் பாராட்டு

உலக அரசியலில் முக்கிய தலைவர்; பிரதமர் மோடிக்கு சிலி அதிபர் போரிக் பாராட்டு

2


ADDED : ஏப் 02, 2025 10:02 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 10:02 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'பிரதமர் மோடி, உலக தலைவர்கள் அனைவருடனும் பேசக் கூடியவர். உலக புவிசார் அரசியலில் முக்கிய தலைவர்' என சிலி அதிபர் கேப்ரியல் போரிக் பாராட்டி உள்ளார்.

தென் அமெரிக்க நாடான சிலியின் அதிபர் கேப்ரியல் போரிக் பான்ட், ஐந்து நாள் பயணமாக டில்லிக்கு வந்தார். அவருடன், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், தொழிலதிபர்களும் வந்துள்ளனர். டில்லியில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார்.

ராஷ்டிரபதி பவனில் சிலி அதிபர் கேப்ரியல் போரிக் பேசியதாவது: பிரதமர் மோடி அவர்களே, இன்று நீங்கள் உலகத் தலைவர்கள் அனைவருடனும் பேசக்கூடிய தகுதியைப் பெற்றுள்ளீர்கள். டிரம்ப், ஜெலென்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றியம், கிரீஸ் அல்லது ஈரான், லத்தீன் அமெரிக்க தலைவர்களுக்கு நீங்கள் ஆதரவளிக்கிறீர்கள்.

இதை வேறு எந்த தலைவரும் இத்தகைய நிலையில் இல்லை. இன்றைய புவிசார் அரசியல் சூழலில் நீங்கள் ஒரு முக்கிய தலைவராக இருக்கிறீர்கள். ரஷ்யாவின் புடின், உக்ரைனின் ஜெலன்ஸ்கி உடன் பேச முடியும். இது வேறு எந்தத் தலைவராலும் இப்போது செய்ய முடியாத ஒன்று. உலகிற்கு அமைதியைக் கொண்டுவருவதில் இந்தியா உறுதியாக உள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் உள்ளது. இந்தியாவில், நீங்கள் வறுமை மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடுகிறீர்கள். இந்தியாவில், உலகில் அமைதியைக் காக்க நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள். இவ்வாறு சிலி அதிபர் கூறினார்.






      Dinamalar
      Follow us