sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரம்மபுத்திராவில் கட்டும் அணையால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை: சீனா உறுதி

/

பிரம்மபுத்திராவில் கட்டும் அணையால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை: சீனா உறுதி

பிரம்மபுத்திராவில் கட்டும் அணையால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை: சீனா உறுதி

பிரம்மபுத்திராவில் கட்டும் அணையால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை: சீனா உறுதி


ADDED : ஆக 04, 2011 11:51 PM

Google News

ADDED : ஆக 04, 2011 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'பிரம்மபுத்திரா ஆற்றில் நாங்கள் கட்டும் அணையால், இந்தியாவின் நலன் பாதிக்கப்படாது என, சீனா உறுதி அளித்துள்ளது. சீனாவின் இந்த உறுதிமொழி மீது, இந்தியா மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது' என, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ராஜ்யசபாவில் கூறினார். பிரம்மபுத்ரா ஆற்றில், ஜாங்கு என்ற இடத்தில், புதிய அணையை சீனா கட்டி வருகிறது. நீர் மின் திட்டத்துக்காக கட்டப்படும் இந்த அணையால், இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் என, புகார் எழுந்தது. இது தொடர்பான கேள்விக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா, ராஜ்யசபாவில் நேற்று பதில் அளித்தார்.

அப்போது குறுக்கிட்ட பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: இந்தியாவும், சீனாவும் அண்டை நாடுகள். ஏதாவது ஒரு விவகாரத்தில், ஒருவரைப் பற்றி மற்றொருவர் பேசும்போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படும். பிரம்மபுத்திரா ஆற்றில், சீனா கட்டி வரும் அணை குறித்து, அந்த நாட்டு அதிகாரிகளிடம், நாம் கவலை தெரிவித்தோம். இதை ஏற்றுக்கொண்ட சீன அரசு, இந்த அணையால், இந்திய நலனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என, உறுதி அளித்துள்ளது. சீனாவின் இந்த உறுதி மீது, நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். அதே நேரத்தில், அணையால் நமக்கு பாதிப்பு எதுவும் வருமா என, ஆய்வு செய்வதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

முன்னதாக அமைச்சர் கிருஷ்ணா பேசுகையில், 'புதிதாக கட்டப்படும் அணை, நீர் மின் உற்பத்திக்காகவே கட்டப்படுவதாகவும், நீரை தேக்கி வைப்பதற்காக கட்டப்படவில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது' என்றார்.






      Dinamalar
      Follow us