sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சீன துப்பாக்கி குவியல் அருணாச்சலில் மீட்பு

/

சீன துப்பாக்கி குவியல் அருணாச்சலில் மீட்பு

சீன துப்பாக்கி குவியல் அருணாச்சலில் மீட்பு

சீன துப்பாக்கி குவியல் அருணாச்சலில் மீட்பு


ADDED : டிச 29, 2024 11:20 PM

Google News

ADDED : டிச 29, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடா நகர்: அருணாச்சல பிரதேச வனப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த, சீனாவை சேர்ந்த ஏராளமான துப்பாக்கிகளை பாதுகாப்பு படையினர் மீட்டனர்.

வடகிழக்கு மாநிலமான அருணாச்சலின் சாங்லாங் மாவட்டத்தில் உள்ள நம்தபா புலிகள் தேசிய பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில், சீனாவை சேர்ந்த பாரம்பரிய துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர், மாவட்ட போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள், மோப்ப நாய்கள், மெட்டல் டிடெக்டர் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த தேடுதல் வேட்டையில், ஏராளமான ஆயுதங்கள் சிக்கின. இதில் 10, எம்.கியூ., - 81 வகை சீன பாரம்பரிய துப்பாக்கிகள் மற்றும் 81 ரக தாக்குதல் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவை கடந்த ஆண்டு சரணடைந்த கிழக்கு நாகா தேசிய அரசு ஆயுதக்குழுவினரால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என, நம்பப்படுகிறது. இவற்றை சாங்லாங் பகுதியில் செயல்படும் பல்வேறு இனக்கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆறு மாதங்களாக தேடி வந்த நிலையில், தற்போது பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.

ஆயுதக்குவியல் மீட்கப்பட்டதன் வாயிலாக, இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us