sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திருச்சூர் நகரில் வலம் வந்த கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்

/

திருச்சூர் நகரில் வலம் வந்த கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்

திருச்சூர் நகரில் வலம் வந்த கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்

திருச்சூர் நகரில் வலம் வந்த கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்


ADDED : டிச 28, 2024 12:20 AM

Google News

ADDED : டிச 28, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி கேரள மாநிலம் திருச்சூர் நகரில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் வலம் வந்தது மக்கள் மனதை கவர்ந்தது.

கேரள மாநிலம் திருச்சூர் நகரில் நேற்று மாலை மறை மாவட்டம் மற்றும் 'பவ்ராவலி' என்று அழைக்கப்படும் மக்கள் கூட்டமைப்பும் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நேற்று நடந்த கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்துள்ள பேரணி மக்கள் மனதை கவர்ந்தது.

மாலை, 5:00 மணிக்கு செயின்ட் தாமஸ் கல்லூரியில் துவங்கிய பேரணியை, வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து, பேராயர் மார் ஆண்ட்ரூஸ் மற்றும் திருச்சூர் மேயர் வர்க்கீஸ் ஆகியோர் பங்கேற்றனர். பலூன் வீசி, ஆடல், பாடல்களுடன், கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்து பேரணி நடந்தது.

பேரணியில், சிறுவர் பெரியவர் வரையிலான 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து உலா வந்தனர். 50 மாற்றுத்திறனாளிகளும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.

இதை காண எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், அரசியல், சமூக மற்றும் கலாச்சார தலைவர்கள் திரண்டு வந்தனர். இதனால் போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us