sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மே.வங்கத்தில் வன்முறை; இருதரப்பினர் மோதல், கல்வீச்சு; 40 பேர் கைது!

/

மே.வங்கத்தில் வன்முறை; இருதரப்பினர் மோதல், கல்வீச்சு; 40 பேர் கைது!

மே.வங்கத்தில் வன்முறை; இருதரப்பினர் மோதல், கல்வீச்சு; 40 பேர் கைது!

மே.வங்கத்தில் வன்முறை; இருதரப்பினர் மோதல், கல்வீச்சு; 40 பேர் கைது!

14


UPDATED : ஜூன் 12, 2025 11:57 AM

ADDED : ஜூன் 12, 2025 11:55 AM

Google News

UPDATED : ஜூன் 12, 2025 11:57 AM ADDED : ஜூன் 12, 2025 11:55 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: மே.வங்கத்தில் இருதரப்பினர் இடையே மோதல் வன்முறையில் முடிந்தது. இது தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேற்குவங்கத்தில் தெற்கு 24 பர்கானாஸில் ஒரு கடை கட்டுமான தகராறில் ஒரு சிவன் கோவிலை சேதப்படுத்தி உள்ளனர். இதையடுத்து இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையில் முடிந்தது. கற்கள் வீசப்பட்டன, வாகனங்கள் எரிக்கப்பட்டன. இது தொடர்பாக 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. வன்முறையைக் கட்டுப்படுத்த, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் கோல்கட்டாவிலிருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இந்த வன்முறையில் ஒரு பெண் கான்ஸ்டபிள் உட்பட பல போலீசார் காயமடைந்தனர்.

வன்முறையைக் கண்டித்து, கோல்கட்டா மேயரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிர்ஹாத் ஹக்கீம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது: ஒரு முக்கியமான பிரச்னையை வகுப்புவாதமாகவும், அரசியலாகவும் மாற்ற பா.ஜ., முயற்சிப்பதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

மேற்குவங்க மாநிலத்தில் நிலவும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க பா.ஜ., முயற்சி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us