sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் வருகை முகுந்த்பூரில் முதல்வர் ஆதிஷி ஆய்வு

/

ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் வருகை முகுந்த்பூரில் முதல்வர் ஆதிஷி ஆய்வு

ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் வருகை முகுந்த்பூரில் முதல்வர் ஆதிஷி ஆய்வு

ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் வருகை முகுந்த்பூரில் முதல்வர் ஆதிஷி ஆய்வு


ADDED : நவ 19, 2024 08:10 PM

Google News

ADDED : நவ 19, 2024 08:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முகுந்த்பூர்:டில்லி மெட்ரோ மெஜந்தா வழித்தடத்தில் நான்காம் கட்டமாக சேர்க்கப்படும் ஓட்டுனர் இல்லாத ரயிலை முதல்வர் ஆதிஷி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

கடந்த 2020 டிசம்பரில், ஜனக்புரி மேற்கு முதல் தாவரவியல் பூங்கா வரையிலான மெஜந்தா வழித்தடத்தில் ஓட்டுனர் இல்லாத ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மஜ்லிஸ் பார்க் முதல் ஷிவ் விஹார் வரையிலான பிங்க் வழித்தடத்தில் 2021 நவம்பரில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டது.

தற்போது 29 ஓட்டுனர் இல்லா ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தன் அனைத்து வழித்தடங்களிலும் ஓட்டுனர் இல்லா ரயில் சேவை வழங்க டில்லி மெட்ரோ தயாராகி வருகிறது.

கடந்த 2022 நவம்பரில் பிரான்ஸ் நாட்டின் ஆல்ஸ்டாம் என்ற நிறுவனத்திற்கு ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதன்படி, தலா ஆறு பெட்டிகளை கொண்ட 52 மெட்ரோ ரயில்களை இந்த நிறுவனம் தயாரிக்கிறது.

நான்காம் கட்ட திட்டத்துக்கான ஓட்டுனர் இல்லாத ரயில்கள், ஆந்திரா மாநிலம், ஸ்ரீசிட்டியில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடனும் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்ட ரயில்கள் கடந்த செப்டம்பரில் மாதம் டில்லி மெட்ரோவிடம் ஸ்ரீசிட்டியில் ஒப்படைக்கப்பட்டன. இந்த ரயில்கள் அதிகபட்சமாக, மணிக்கு 95 கி.மீ., வேகத்தில் இயக்கலாம். தற்போது 85 கி.மீ., வேகத்தில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் கடந்த வெள்ளிக்கிழமை டில்லியின் முகுந்த்பூர் பணிமனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்த ரயில்கள் மெஜந்தா வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களை முதல்வர் ஆதிஷி நேற்று ஆய்வு செய்தார்.

முதல்வர் மகிழ்ச்சி!


மெட்ரோ ரயில் படங்களை, 'எக்ஸ்' வலைதளத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் ஆதிஷி கூறியிருப்பதாவது:இன்று, இந்த அதிநவீன ஓட்டுனர் இல்லாத ரயிலை ஆய்வு செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இது விரைவில் மெஜந்தா வழித்தடத்தில் சேரும்.அரவிந்த் கெஜ்ரிவாலின் தொலைநோக்கு தலைமையின் கீழ், டில்லி மெட்ரோ டில்லி முழுவதும் விரைவான முன்னேற்றத்தைத் தொடர்கிறது. ஓட்டுனர் இல்லாத ரயில்கள் இயங்கும் ஒரே மெட்ரோ டில்லி தான். டில்லி மெட்ரோ கடந்த 10 ஆண்டுகளில் மிக வேகமாக விரிவடைந்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.








      Dinamalar
      Follow us