sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி ஷாக் ரூ.2,000 கோடி மதிப்பு 'கோகைன்' சிக்கியது

/

டில்லி ஷாக் ரூ.2,000 கோடி மதிப்பு 'கோகைன்' சிக்கியது

டில்லி ஷாக் ரூ.2,000 கோடி மதிப்பு 'கோகைன்' சிக்கியது

டில்லி ஷாக் ரூ.2,000 கோடி மதிப்பு 'கோகைன்' சிக்கியது


ADDED : அக் 03, 2024 02:33 AM

Google News

ADDED : அக் 03, 2024 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, டில்லியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 'கோகைன்' போதைப்பொருள் சிக்கியது. இது தொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி, டில்லியின் மெஹரவுலியில் இயங்கிய போதைப்பொருள் கும்பலை, கடந்த இரண்டு மாதங்களாக போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், டில்லி போலீசார் அப்பகுதியில் அதிரடியாக ரெய்டு நடத்தி, 565 கிலோ எடையிலான கோகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

இதன் சர்வதேச மதிப்பு 2,000 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்தனர்.

முன்னதாக டில்லி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் 29ம் தேதி, விமானத்தில் கோகைன் போதைப்பொருள் கடத்தி வந்த லைபீரியா நாட்டைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

அந்நபரிடம் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 24 கோடி ரூபாய்.






      Dinamalar
      Follow us