வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / இந்தியா / ஜி.டி.தேவகவுடா மீது லோக் ஆயுக்தாவில் புகார் / ஜி.டி.தேவகவுடா மீது லோக் ஆயுக்தாவில் புகார்
/
செய்திகள்
ஜி.டி.தேவகவுடா மீது லோக் ஆயுக்தாவில் புகார்
ADDED : ஜன 11, 2025 11:04 PM
மைசூரு:
பின், சிநேகமயி கிருஷ்ணா அளித்த பேட்டி:மைசூரு அருகே தேவனுாரில் உள்ள அரசு நிலத்தை சவுடய்யா என்பவர் ஆக்கிரமித்தார். அந்த நிலத்தை, 'முடா' கையகப்படுத்தியதாக கூறி, 50க்கு 50 திட்டத்தின் கீழ் ஆறு வீட்டுமனைகளை அவர் வாங்கினார். இதற்கு சாமுண்டீஸ்வரி தொகுதி ம.ஜ.த., -- எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா உடந்தையாக இருந்துள்ளார்.ஆறு வீட்டுமனைகளில் இரண்டு வீட்டுமனைகளை ஜி.டி.,தேவகவுடாவுக்கு, சவுடய்யா கொடுத்துள்ளார். வீட்டுமனைகளை மகள், மருமகன் பெயருக்கு ஜி.டி.,தேவகவுடா எழுதி கொடுத்து இருக்கிறார். இந்த முறைகேட்டில் 'முடா' அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் லோக் ஆயுக்தாவில் புகார் செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து ஜி.டி.தேவகவுடா கூறுகையில், ''சிநேகமயி கிருஷ்ணா நன்றாக பணியாற்றி வருகிறார். தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று போராடுகிறார். அதில் தவறு இல்லை. ஆனால் என் மீது பொய் புகார் கொடுத்துள்ளார். விசாரணையில் உண்மை தெரிய வரும்,'' என்றார்.