இன்னும் 6 மாதங்களில் மீண்டும் முழு அமைதி: உறுதி அளித்தார் காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர்
இன்னும் 6 மாதங்களில் மீண்டும் முழு அமைதி: உறுதி அளித்தார் காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர்
ADDED : ஏப் 19, 2025 09:44 PM

ஸ்ரீநகர்: 'அடுத்த 6 மாதங்களுக்குள் ஜம்மு பிராந்தியம் முழுமையான அமைதியை மீண்டும் பெறும்,' என்று ஜம்மு-காஷ்மீர் மாநில லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா கூறினார்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபகாலமாக பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன. இளைஞர்கள் பயங்கரவாத அமைப்பில் சேர்வது குறைந்துள்ளது.
இந்நிலையில்,இன்ற ஸ்ரீநகரில் வணிகத் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் சர்வதேச வலையமைப்பான YPO-Global One உறுப்பினர்களுடனான கூட்டம் நடைபெற்றது. இதில் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஜம்மு பகுதியில், சமீப காலங்களில் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அமைதி நிலைநாட்டப்படும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஜம்மு-காஷ்மீர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தத்தைக் கண்டுள்ளது.
இவ்வாறு லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா பேசினார்.