sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காங்., அமைச்சர்கள் திடீர் டில்லி பயணம்

/

காங்., அமைச்சர்கள் திடீர் டில்லி பயணம்

காங்., அமைச்சர்கள் திடீர் டில்லி பயணம்

காங்., அமைச்சர்கள் திடீர் டில்லி பயணம்


ADDED : ஜன 11, 2024 11:42 PM

Google News

ADDED : ஜன 11, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: லோக்சபா தேர்தல் குறித்து, ஆலோசனை நடத்தும் நோக்கில், கர்நாடக அமைச்சர்கள் டில்லி செல்கிறோம், என கலால்துறை அமைச்சர் திம்மாபுரா தெரிவித்தார்.

லோக்சபா தேர்தலுக்கு, காங்கிரஸ் தயாராகி வருகிறது. கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில், காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாநிலத்தின் 28 லோக்சபா தொகுதிகளின் பொறுப்பு, சித்தராமையா அமைச்சரவையின், 28 அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் ஆலோசனை நடத்த, கட்சி மேலிடம் டில்லிக்கு அழைத்துள்ளதால், அமைச்சர்கள் டில்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

கலால்துறை அமைச்சர் திம்மாபுரா உட்பட, சில அமைச்சர்கள் நேற்று இரவு 7:30 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் டில்லிக்கு சென்றனர்.

அதற்கு முன், அமைச்சர் திம்மாபுரா கூறுகையில், கூடுதல் துணை முதல்வர்கள் நியமனம் குறித்து, கட்சி மேலிடம் முடிவு செய்யும். லோக்சபா தேர்தல் குறித்து, ஆலோசனை நடத்தும் நோக்கில், கர்நாடக அமைச்சர்கள் டில்லி செல்கிறோம், தேர்தல் திட்டங்கள் தொடர்பாக, மேலிடத்திடம் ஆலோசனை கேட்டறிவோம், என்றார்.






      Dinamalar
      Follow us