sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எம்.எல்.ஏ., மீது போலீசில் காங்., புகார் 

/

எம்.எல்.ஏ., மீது போலீசில் காங்., புகார் 

எம்.எல்.ஏ., மீது போலீசில் காங்., புகார் 

எம்.எல்.ஏ., மீது போலீசில் காங்., புகார் 


ADDED : டிச 06, 2024 06:43 AM

Google News

ADDED : டிச 06, 2024 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துமகூரு: முதல்வருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட துாண்டிய பா.ஜ., -- எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா மீது நடவடிக்கை எடுக்க கோரி, காங்கிரஸ் புகார் செய்துள்ளது.

துமகூரில் கடந்த 2ம் தேதி பல்வேறு வளர்ச்சி பணிகளை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்பாக, முதல்வர் வருகைக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகை தரப்படும் என, துமகூரு டவுன் பா.ஜ., -- எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா பேசிய மொபைல் ஆடியோ வெளியானது.

இந்நிலையில், நேற்று கர்நாடக காங்கிரஸ் பொது செயலர் சூர்யா முகுந்த ராஜ், துமகூரு எஸ்.பி., அசோக்கிடம் அளித்த புகாரில், 'முதல்வரின் வருகையை சீர்குலைக்கும் வகையிலும், கருப்பு கொடி காட்டி கலவரத்தை துாண்டி விடவும் பா.ஜ., -- எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா முயற்சி செய்துஉள்ளார்.

'அரசின் திட்டங்களை சீர்குலைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். தீய நோக்கத்துடன் அவர் செயல்பட்டு உள்ளது தெளிவாக உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us