sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு புறக்கணித்தது காங்., அரசு: பிரதமர் மோடி

/

சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு புறக்கணித்தது காங்., அரசு: பிரதமர் மோடி

சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு புறக்கணித்தது காங்., அரசு: பிரதமர் மோடி

சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு புறக்கணித்தது காங்., அரசு: பிரதமர் மோடி


ADDED : நவ 16, 2024 12:06 AM

Google News

ADDED : நவ 16, 2024 12:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜமூய்: “சுதந்திர போராட்டத்தில் பழங்குடியின சமூகத்தினரின் பங்கை, மத்தியிலும், மாநிலத்திலும் இருந்த முந்தைய அரசுகள் புறக்கணித்தன,” என பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.

பீஹாரில், பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் 150வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது.

இதில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் நிதீஷ் குமார், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பழங்குடியினர் கவுரவ தின விழாவான இதில், 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் துவக்கி வைத்தார்.

வேலைவாய்ப்பு


அப்போது அவர் பேசியதாவது:

ஆதிவாசி சமூகத்தை நான் பெரிதும் மதிக்கிறேன்; வணங்குகிறேன். ஆகையால்தான், பிர்சா முண்டாவின் பிறந்த நாளை பழங்குடியினர் கவுரவ தினமாக கொண்டாட விரும்பினேன்.

பழங்காலத்தில் இருந்தே நாட்டின் கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் பழங்குடியினர் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினர் பங்கை யாராலும் மறக்க முடியாது. ஆனால், முந்தைய அரசுகள் வேண்டுமென்றே இந்த உண்மையை மறைத்தன.

இதனால், எல்லா புகழும் ஒரு கட்சிக்கும், அதை நடத்தும் குடும்பத்துக்கும் அளிக்கப்பட்டது.

ஒரு கட்சிக்கும், அதைச் சார்ந்த குடும்பத்துக்கும் மட்டுமே இதற்கான பயன் கொடுக்கப்பட்டால், பிர்சா முண்டா, தில்கா மாஞ்சி போன்ற பழங்குடியின தலைவர்களை யார் நினைவில் கொள்வர்? பழங்குடியினரின் பிரச்னைகள் குறித்து மத்தியிலும், மாநிலத்திலும் இருந்த முந்தைய அரசுகள் எப்போதும் கவலைப்பட்டதில்லை.

பழங்குடியினருக்கு சிறந்த கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றை வழங்குவதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. பழங்குடியினர் நலனுக்கான பட்ஜெட் 25,000 கோடி ரூபாயாக இருந்த நிலையில், அதை 1.25 லட்சம் கோடி ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

அவர்களின் சிரமத்தை மனதில் வைத்தே, 24,000 கோடி ரூபாய் மதிப்பில், 'பிரதமர் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான்' திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

உரிய நடவடிக்கை


பழங்குடியினரின் கலாசாரத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவர்கள் பின்பற்றி வரும் பாரம்பரிய மருத்துவ முறைகளை ஆதரிக்கும் வகையில், நாடு முழுதும் 700 ஏகலைவா பள்ளிகளை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதன் வாயிலாக, அந்த சமூகத்திற்கு மிகப்பெரிய உதவி கிடைக்கும் என நம்புகிறோம். ஆதிவாசி குடும்பங்கள் தங்கள் சுகாதாரத் தேவைகளுக்காக நீண்ட துாரம் பயணிக்கும் நிலையைத் தடுக்கும் வகையில், ஏராளமான ஆயுஷ்மான் மருத்துவமனைகள் அமைக்கப்படவுள்ளன.

நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதியாக திரவுபதி முர்முவை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைத்ததை, தேசிய ஜனநாயக கூட்டணி அதிர்ஷ்டமாக கருதுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன், அங்கு வைக்கப்பட்டிருந்த பிர்சா முண்டாவின் மார்பளவு சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, பிர்சா முண்டாவின் முழுஉருவ சிலைக்கு ஏற்கனவே மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் வீடியோ ஒன்றை தன் சமூக வலைதள பக்கத்தில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். அதில், 'நாட்டின் பெருமை மற்றும் புகழுக்காக அனைத்துவிதமான தியாகத்தையும் பிர்சா முண்டா செய்துள்ளார். பழங்குடியினர் கவுரவு தினத்தில் அவரை வணங்குவோம்' என, தெரிவித்துள்ளார். பிர்சா பிறந்தநாளை ஒட்டி கடந்த 2000ல் தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட ஜார்க்கண்ட் மக்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.



3,000 கிலோ எடை சிலை திறப்பு

டில்லியில் உள்ள பான்சேரா பூங்காவின், நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிர்சா முண்டாவின் 3,000 கிலோ எடையுள்ள சிலையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “பிர்சா முண்டாவின் வாழ்க்கையை இரண்டு பாகங்களாக பிரிக்கலாம். ஒன்று பழங்குடியினரின் கலாசாரத்தை அவர் பாதுகாத்தது; மற்றொன்று நாட்டின் சுதந்திரத்திற்காக அவர் மேற்கொண்ட உச்சபட்ச தியாக உணர்வு. ''தன் 25 வயதில் அவர் எழுதிய கதை, 150 ஆண்டுகள் கடந்து இன்றும் நினைவில் உள்ளது. இந்த ஆண்டு துவங்கி, அடுத்த ஆண்டு நவ., 15 வரை நாடு முழுதும் அவர் பிறந்தநாள் கொண்டாடப்படும்,” என்றார்.



திடீர் கோளாறு

பீஹார் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தியோகர் விமான நிலையத்தில் இருந்து, விமானப் படைக்கு சொந்தமான விமானம் வாயிலாக பிரதமர் டில்லி திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை சரிசெய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால், விமான நிலையத்திலேயே இரண்டு மணி நேரம் காத்திருந்த பிரதமர், வேறொரு விமானம் வாயிலாக டில்லி புறப்பட்டு சென்றார். இதேபோல், ஜார்க்கண்டின் கோட்டாவில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ராகுலின் ஹெலிகாப்டர் பறக்க அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக அவர் அங்கு சிக்கிக் கொண்டார்.








      Dinamalar
      Follow us