sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஊழல் செய்வதில் காங்., இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது: பிரதமர் மோடி

/

ஊழல் செய்வதில் காங்., இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது: பிரதமர் மோடி

ஊழல் செய்வதில் காங்., இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது: பிரதமர் மோடி

ஊழல் செய்வதில் காங்., இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது: பிரதமர் மோடி

15


ADDED : மே 30, 2024 03:01 PM

Google News

ADDED : மே 30, 2024 03:01 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹோஷியாப்பூர்: ஊழல் செய்வதில் காங்கிரஸ் இரட்டை முனைவர் (பி.எச்டி) பட்டம் பெற்றுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஹோஷியாப்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நீண்ட நாட்களுக்கு பிறகு, முழு மெஜாரிட்டி உடன் ஒரு அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க போகிறது. மத்தியில் ஆட்சி அமைத்ததும் ஆதம்பூர் விமான நிலையத்திற்கு குரு ரவிதாஸ் பெயர் சூட்டப்படும்.

ஊழல் செய்வதில் காங்கிரஸ் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது. ஏழைகள் நலனே எனது அரசின் முக்கியமான திட்டம். மாநிலத்தில் விவசாயம் மற்றும் தொழில்துறையை ஆம் ஆத்மி அரசு அழித்துவிட்டது.

அரசியலமைப்பு குறித்து இண்டியா கூட்டணியினர் பேசுவதை கேட்க முடிகிறது. இவர்கள் தான் அவசரகாலத்தில் அரசியலமைப்பை நெறித்தனர். 1984 ல் சீக்கியர்கள் கொல்லப்பட்ட போது, அவர்கள் ஏன் அரசியலமைப்பை பற்றி சிந்திக்கவில்லை.

தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினரின் இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க விட மாட்டேன் என உறுதிமொழி எடுத்துள்ளேன். இதற்கு எதிராக காங்கிரஸ், இண்டியா கூட்டணியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இட ஒதுக்கீட்டை பறித்த வரலாறு அக்கட்சிகளுக்கு உண்டு. அரசியல்சாசனத்தின் ஆன்மா, அம்பேத்கரின் ஆன்மாவை அவர்கள் அவமதிக்கின்றனர். இந்த இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என சொல்கின்றனர். இதனை நான் அம்பலப்படுத்தியதால், அவர்கள் கோபம் அடைந்து என்னை திட்டுகின்றனர்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.






      Dinamalar
      Follow us