sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு

/

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு

1


ADDED : ஆக 12, 2025 04:59 PM

Google News

1

ADDED : ஆக 12, 2025 04:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சூர்: 2024 பொதுத் தேர்தலின் போது திருச்சூர் லோக்சபா தொகுதிக்கான, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்காக தவறான பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்ததாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யக் கோரி, திருச்சூர் முன்னாள் காங்கிரஸ் எம்பி பிரதாபன் இன்று போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

2024 பொதுத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாஜ அமோக வெற்றி பெற்றது.

தற்போது மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத் துறை இணையமைச்சராக பொறுப்பு வகிக்கும் சுரேஷ் கோபி, திருச்சூர் தொகுதியில் 74,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கடுமையான மும்முனைப் போட்டியில் சிபிஐயின் சுனில் குமார் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் முரளீதரனை தோற்கடித்தார். இந்நிலையில் பிரதாபன் சுரேஷ் கோபி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்த பிறகு பிரதாபன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, தொகுதியில் உள்ள ஒரு வீட்டில் தொடர்ந்து 6 மாதங்கள் தங்கியிருந்தார். அப்போது இங்குள்ள வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சேர்க்க முடிந்தது

ஆனால் அவர் அளித்த பிரமாணப்பத்திரம் முற்றிலும் தவறானது, ஏனெனில் அவர் கூறிய காலகட்டத்தில் 6 மாதங்கள் குறிப்பிட்ட வீட்டில் தங்கவில்லை.'இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு வந்த துணைப் பட்டியலில் சுரேஷ் கோபி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 11 பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அது தவறான பிரமாணப் பத்திரம்.

இதன் காரணமாக, அவரது வாக்கு போலியானது மற்றும் செல்லாதது. அவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். அவரது வாக்கு ரத்து செய்யப்பட வேண்டும்.

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான திருவனந்தபுரம் நகரக் கழகத்தின் சாஸ்தமங்கலம் வார்டின் வாக்காளர் பட்டியலில் சுரேஷ் கோபி மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்கள் இன்னும் உள்ளன.

2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பு போலி வாக்காளர்கள் குறித்து காங்கிரஸ், குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்களை எழுப்பியபோது மாவட்ட நிர்வாகம் உரிய தீவிரத்தை எடுக்கவில்லை.

இவ்வாறு பிரதாபன் கூறினார்.






      Dinamalar
      Follow us