sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'நாங்கள் 5 ஆண்டில் செய்ததை செய்ய காங்கிரசுக்கு நீண்ட காலம் தேவை' அருணாச்சலில் பிரதமர் மோடி பேச்சு

/

'நாங்கள் 5 ஆண்டில் செய்ததை செய்ய காங்கிரசுக்கு நீண்ட காலம் தேவை' அருணாச்சலில் பிரதமர் மோடி பேச்சு

'நாங்கள் 5 ஆண்டில் செய்ததை செய்ய காங்கிரசுக்கு நீண்ட காலம் தேவை' அருணாச்சலில் பிரதமர் மோடி பேச்சு

'நாங்கள் 5 ஆண்டில் செய்ததை செய்ய காங்கிரசுக்கு நீண்ட காலம் தேவை' அருணாச்சலில் பிரதமர் மோடி பேச்சு


ADDED : மார் 09, 2024 11:36 PM

Google News

ADDED : மார் 09, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடாநகர்: ''வட கிழக்கு மாநிலங்களில், கடந்த ஐந்து ஆண்டுகளில், என் தலைமையிலான பா.ஜ., அரசு ஏராளமான வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளது.

''இதுவே காங்கிரசாக இருந்திருந்தால், இவற்றையெல்லாம் செய்ய, 20 ஆண்டுகள் எடுத்திருக்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்து வருகிறார்.

நாட்டின் பாதுகாப்பு


அந்த வகையில், வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடாநகரில் நடந்த நிகழ்ச்சியில், வட கிழக்கு பிராந்தியங்களுக்கான, 55,600 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை, பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:

நம் நாட்டின் வர்த்தகம், சுற்றுலா மற்றும் தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியா உடனான பிற உறவுகளில், வட கிழக்கு பிராந்தியம் வலுவான இணைப்பாக மாறப் போகிறது. இந்த பிராந்தியத்தில் தற்போது, 55,000 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் துவங்கப்பட்டு உள்ளன.

வட கிழக்கு பிராந்தியத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், என் தலைமையிலான பா.ஜ., அரசு ஏராளமான வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளது. இதுவே காங்கிரசாக இருந்திருந்தால், இவற்றையெல்லாம் செய்ய, 20 ஆண்டுகள் எடுத்திருக்கும்.

அருணாச்சலில் இரு லோக்சபா தொகுதிகள் மட்டுமே இருப்பதால், அங்குள்ள எல்லை யோர கிராமங்களை புறக்கணித்து, நாட்டின் பாதுகாப்போடு, காங்., விளையாடியது.

முன்னுரிமை


ஆனால் நாங்கள், நாட்டை வலிமையாக்க மாநிலத்தின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றி வருகிறோம். கடந்த 2019ல், சேலா சுரங்கப்பாதைக்கு அடிக்கல் நாட்டினேன்.

அப்போது, தேர்தல் ஆதாயத்துக்காக இதை நான் செய்தேன் என சிலர் விமர்சித்தனர். தற்போது அது தவறு என, நிரூபிக்கப்பட்டு உள்ளது.

என்னுடைய வாக்குறுதிகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்படுகின்றன என்பதை, ஒட்டு மொத்த வட கிழக்கு மாநிலங்களின் மக்கள் கவனித்து வருகின்றனர்.

அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை நான் ஒருபோதும் கெடுக்க மாட்டேன்.

வளர்ந்த பாரதம் என்ற கனவை நிறைவேற்ற, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் சுத்தமான குடிநீர், வீடுகள், எரிவாயு இணைப்புகள், மின்சாரம் மற்றும் இணைய வசதிகளைப் பெறுவதை உறுதி செய்வதே என் முன்னுரிமை.

என் மூன்றாவது ஆட்சிக் காலத்தில், சுற்றுலாத் துறை, வேலையில்லாத இளைஞர்களுக்கான ஸ்டார்ட் அப் துவங்குதல் போன்றவற்றில் அதி கவனம் செலுத்தப்படும்.

மேலும், நாட்டில் உள்ள மூன்று கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதே என் குறிக்கோள்.

இவ்வாறு அவர் பேசினார்.

யானை மீது சவாரி செய்த பிரதமர்

அசாமில் உள்ள உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றான காசிரங்கா தேசியப் பூங்காவை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார். மிஹிமுக் பகுதியில், 'பிரத்யும்னா' என்ற யானை மீது அமர்ந்தபடி, அவர் சவாரி செய்தார். அவரை பின்தொடர்ந்து, 16 யானைகள் அணிவகுத்துச் சென்றன. மேலும், லக்கிமாய், பிரத்யும்னா, பூல்மாய் ஆகிய மூன்று யானைகளுக்கு பிரதமர் மோடி கரும்புகளை ஊட்டினார். மேலும், ஜீப்பில் சென்ற அவர், சரணாலயத்தில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், காட்டு எருமைகள், மான்கள் மற்றும் பறவைகளை பார்த்தார்.



125 அடி உயர சிலை திறப்பு

அருணாச்சலில் இருந்து ஹெலிகாப்டர் வாயிலாக, அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு, தியோக் அருகே உள்ள ஹோலோங்காபரில், அஹோம் லச்சித் போர்புகானின், 125 அடி உயர வெண்கல சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இச்சிலைக்கு, 'வீரத்தின் சிலை' என பெயரிடப்பட்டு உள்ளது. தற்போதைய அசாம் மாநிலம் முன்பு அஹோம் ராஜ்யம் என அழைக்கப்பட்டது. இதன் தளபதியாக இருந்து மொகலாயர்களை தோற்கடித்த பெருமைக்குரியவர் லச்சித் போர்புகான்.



சேலா சுரங்கப்பாதை திறப்பு

அருணாசல பிரதேசத்தில், சேலா சுரங்கப்பாதை கட்டுமானத்திற்கு, 2019 பிப்ரவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஐந்து ஆண்டுகளாக நடந்த கட்டுமானப் பணிகளுக்கு பின், தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.தவாங் பகுதியில், பாலிபாரா -- சரித்வார் -- தவாங் சாலை மார்க்கத்தில் அமைந்துள்ள சேலா சுரங்க வழிச் சாலை வாயிலாக, கடும் பனிப்பொழிவு, பெரு மழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் சிரமமின்றி பயணிக்கலாம். 825 கோடி ரூபாயில், உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதையாக கட்டப்பட்டுள்ள சேலா சுரங்கப்பாதை, பொறியியல் வல்லுனர்களின் திறனை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 13,000 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சியளிக்கும் இந்த சுரங்க வழிச்சாலை வழியாக, சீன எல்லையொட்டிய பகுதிகளுக்கு ராணுவ ஆயுதங்கள், வாகனங்கள் மற்றும் உபகரணங்களை மிக எளிதாக எடுத்துச் செல்லலாம். பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலை அமைப்பால் கட்டப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையில், 1,003 மீட்டர் மற்றும் 1,595 மீட்டர் நீளமுள்ள இரண்டு சுரங்கங்கள் உள்ளன. இரண்டாவது சுரங்கப்பாதையில் சர்வதேச விதிகளின்படி ஒட்டி ஒரு தப்பிக்கும் வழி உள்ளது.








      Dinamalar
      Follow us