டில்லியில் ஒரு தொகுதிக்கு கூட காங்., தகுதியில்லை: ஆம் ஆத்மி கொடுத்த அடுத்த அதிர்ச்சி
டில்லியில் ஒரு தொகுதிக்கு கூட காங்., தகுதியில்லை: ஆம் ஆத்மி கொடுத்த அடுத்த அதிர்ச்சி
UPDATED : பிப் 13, 2024 03:38 PM
ADDED : பிப் 13, 2024 01:47 PM

புதுடில்லி: டில்லியில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கு கூட காங்கிரஸ் கட்சிக்கு தகுதியில்லை. ஆனால், கூட்டணி தர்மத்திற்காக அக்கட்சிக்கு ஒரு தொகுதி வழங்க தயாராக உள்ளதாக ஆத்மி கட்சியின் எம்.பி., சந்தீப் பதக் கூறியுள்ளார்.
பா.ஜ.,வுக்கு எதிராக அமைந்துள்ள இண்டியா கூட்டணியில் அதில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்து வருகின்றன. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்க முடியாது என திரிணமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. பஞ்சாபில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டில்லி முதல்வருமான கெஜ்ரிவால் அறிவித்தார்.
இந்நிலையில், டில்லியில் தொகுதி பங்கீடு குறித்து ஆம் ஆத்மி கட்சி எம்.பி., சந்தீப் பதக் கூறியதாவது: டில்லியில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கு கூட காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை. ஆனால், கூட்டணி தர்மத்திற்காக ஒரு தொகுதி வழங்க தயாராக உள்ளோம். டில்லியில் ஆம் ஆத்மி 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் திட்டத்தை முன்மொழிந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.