sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம்; பேனர் வைத்து காங்., சேட்டை

/

காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம்; பேனர் வைத்து காங்., சேட்டை

காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம்; பேனர் வைத்து காங்., சேட்டை

காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம்; பேனர் வைத்து காங்., சேட்டை

42


ADDED : டிச 27, 2024 05:05 AM

Google News

ADDED : டிச 27, 2024 05:05 AM

42


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெலகாவி காங்கிரஸ் மாநாட்டின் நுாற்றாண்டு விழா நிகழ்ச்சிக்காக காங்கிரஸ் சார்பில் பெலகாவியில் வைக்கப்பட்ட வரவேற்பு பேனர்களில் காஷ்மீர் பகுதிகள் நீக்கப்பட்ட இந்திய வரைபடத்தை பயன்படுத்தியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது இங்கு உள்ள பெலகாவியில் 1924 டிசம்பரில் மஹாத்மா காந்தி தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அவர் முதன்முறையாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெலகாவி மாநாட்டின் நுாற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான சிவகுமார் தலைமையில் இரண்டு நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், காங்., தேசிய செயற்குழுக் கூட்டமும் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். கட்சியின் குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகள் குறித்து இந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்களை வரவேற்க கட்சியினர் சார்பில் சாலைகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் காஷ்மீரின் சில பகுதிகள் நீக்கப்பட்ட இந்திய வரைபடத்தை பயன்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக பா.ஜ., வெளியிட்டுள்ள அறிக்கை:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுக்கு வழங்க விரும்புகிறது. 'காந்திய இந்தியா' என்ற பெயரில் காங்கிரசார் இந்திய வரைபடத்தை சிதைத்தது நாட்டுக்கு செய்துள்ள துரோகம்.

தனிப்பட்ட சுயலாபத்திற்காகவும், தாஜா செய்யும் அரசியலுக்காகவும் எந்த விதமான மோசமான வேலையையும் செய்ய காங்கிரஸ் தயாராக உள்ளது என்பதற்கு பெலகாவியில் வைக்கப்பட்டுள்ள பேனர்களே சாட்சி.

இந்த சர்ச்சைக்குரிய பேனர்களை உடனடியாக அகற்றி, இந்திய வரைபடத்தை சிதைத்த துரோகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளக்க வேண்டும்


இதுகுறித்து பா.ஜ., - எம்.பி., சுதன்ஷு திரிவேதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''காங்கிரஸ் பயன்படுத்தும் இந்திய வரைபடத்தில் மட்டும் ஏன் சில பகுதிகள் துண்டாகின்றன. ''சுதந்திர காஷ்மீர் கருத்தை ஆதரிக்கும் வெளிநாட்டு தொழிலதிபர் ஜார்ஜ் சோரசின் ரகசிய அமைப்பில் இருந்து காங்கிரசுக்கு ஏதேனும் சிக்னல் கிடைத்ததா? இது வெறும் தற்செயலானதா அல்லது இந்தியாவுக்கு எதிரான சதியின் ஒரு பகுதியா என்பதை காங்கிரஸ் விளக்க வேண்டும்,'' என்றார்.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் காங்கிரஸ் மறுத்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் நிர்வாகி ஸ்ரீநிவாஸ் கூறுகையில், “பெலகாவியில் வைக்கப்பட்ட பேனர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ பேனர்கள் அல்ல. ''அது தொண்டர்களால் வைக்கப்பட்டவை. அதனால் தவறு நடந்திருக்கலாம். இந்த சர்ச்சையை பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., கிளப்பியுள்ளது. இதை வைத்து பொய் பிரசாரம் செய்கின்றனர்,” என்றார்.






      Dinamalar
      Follow us