sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காங்கிரஸ், திரிணமுல் காங்., மோதல் முற்றுகிறது!: இண்டியா அணி தலைவர்கள் கவலை

/

காங்கிரஸ், திரிணமுல் காங்., மோதல் முற்றுகிறது!: இண்டியா அணி தலைவர்கள் கவலை

காங்கிரஸ், திரிணமுல் காங்., மோதல் முற்றுகிறது!: இண்டியா அணி தலைவர்கள் கவலை

காங்கிரஸ், திரிணமுல் காங்., மோதல் முற்றுகிறது!: இண்டியா அணி தலைவர்கள் கவலை

26


UPDATED : பிப் 05, 2024 02:24 AM

ADDED : பிப் 04, 2024 12:46 AM

Google News

UPDATED : பிப் 05, 2024 02:24 AM ADDED : பிப் 04, 2024 12:46 AM

26


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் இடையிலான மோதல் முற்றி வருவதால், இண்டியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் பா.ஜ., தீவிரமாக உள்ளது. இந்த முறை விட்டால் இனி தேறுவது கஷ்டம் என, மோடியின் வெற்றியை தடுக்க எதிர்க்கட்சிகள் கைகோர்த்தன. மொத்தம் 28 கட்சிகள் சேர்ந்த கூட்டணிக்கு இண்டியா என பெயர் சூட்டின. ஆனால், தொகுதி பங்கீடு பேச்சு தொடங்கியதுமே மோதல் வெடித்தது. மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சிகள், காங்கிரசுக்கு தொகுதிகளை தாரை வார்க்க முடியாது என்றன.

'நாங்கள் நிச்சயமாக ஜெயிக்க வாய்ப்புள்ள தொகுதிகளை உங்களுக்கு விட்டுக் கொடுத்து, நீங்கள் தோல்வி அடைந்தால் இண்டியா கூட்டணிக்கு தான் இழப்பு. அதனால் கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள்' என கறாராக பேரம் பேசின.

கெடுபிடி


மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ், பஞ்சாபில் ஆம் ஆத்மி, கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழகத்தில் தி.மு.க., என இக்கட்சிகள் நேராகவும், மறைமுகமாகவும் காங்கிரசுக்கு அழுத்தம் கொடுத்தன.

மற்ற கட்சிகளை விட மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் கெடுபிடியாக நடந்து கொண்டது. 'கடந்த தேர்தலில் நீங்கள் ஜெயித்த இரண்டு தொகுதிகளை மட்டும் தருகிறோம்' என்றது. காங்கிரஸ் ஏற்கவில்லை.

'அப்படியானால் ஒரு சீட் கூட தராமல் 42 தொகுதிகளிலும் நாங்களே நிற்போம்' என அறிவித்தார் மம்தா. மேலும், 'மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்கிறேன். எனவே அவர்களுக்கும் தொகுதி ஒதுக்க மாட்டேன். நீங்களும் தொகுதி வேண்டும் என்றால் கம்யூனிஸ்டுகளை கழற்றி விட்டு வாருங்கள்' என மம்தா நிபந்தனை விதித்தார்.

யாத்திரை செல்லும் ராகுலையும் மம்தா கிண்டல் செய்தார். ராகுல் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், 'நிலைமை சரியாகவிடும்' என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

பதிலடி


ஆனால், மேற்கு வங்கத்தில் உள்ள அவரது கட்சியின் தலைவர் பொறுக்க முடியாமல் மம்தாவுக்கு பதிலடி கொடுக்கிறார்.

'நாடு முழுதும் போட்டியிட்டாலும், 40 தொகுதிகளில்கூட காங்கிரஸ் ஜெயிக்க முடியாது' என்று மம்தா கூறியதை கண்டித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ''மம்தாவுக்கு பா.ஜ.,வைப் பார்த்து பயம். அந்த பயத்தில், காங்கிரஸ் மீது பாய்கிறார்,'' என்றார்.

இப்படியாக இரண்டு கட்சிகளுக்கும் இடையே மோதல் முற்றுவதால், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு கவலை ஏற்பட்டுள்ளது. 'இண்டியா அணியில் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை' எனக்கூறி ஐக்கிய ஜனதா தளம் விலகியதை போல, மேலும் பல கட்சிகள் வெளியேறுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

-- நமது நிருபர் -








      Dinamalar
      Follow us