sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாஜவுக்கு எம்.எல்.ஏ.,க்களை சப்ளை செய்யும் காங்கிரஸ்: சொல்கிறார் கெஜ்ரிவால்

/

பாஜவுக்கு எம்.எல்.ஏ.,க்களை சப்ளை செய்யும் காங்கிரஸ்: சொல்கிறார் கெஜ்ரிவால்

பாஜவுக்கு எம்.எல்.ஏ.,க்களை சப்ளை செய்யும் காங்கிரஸ்: சொல்கிறார் கெஜ்ரிவால்

பாஜவுக்கு எம்.எல்.ஏ.,க்களை சப்ளை செய்யும் காங்கிரஸ்: சொல்கிறார் கெஜ்ரிவால்

5


ADDED : அக் 04, 2025 09:52 PM

Google News

5

ADDED : அக் 04, 2025 09:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:'காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது. 2027 கோவா சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மாயேம் பகுதியில் ஆம்ஆத்மி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு, அவர் கூறியதாவது; காங்கிரஸூடன் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி கிடையாது. கடந்த சில ஆண்டுகளாக எம்எல்ஏக்களை காங்கிரஸ் மொத்தமாக பாஜவுக்கு விநியோகித்து வருகிறது. எதிர்காலத்தில் எந்தவொரு காங்கிரஸ் எம்எல்ஏவும் பாஜவுக்கு மாற மாட்டார்கள் என்று கோவா வாக்காளர்களுக்கு அக்கட்சியால் உறுதியளிக்க முடியுமா?

2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜவுக்கு தாவினர்.2022ம் ஆண்டில் மட்டும் 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜவில் இணைந்தனர். ஆம்ஆத்மி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால், அது பாஜவுக்கு எம்எல்ஏக்களை வழங்குவதற்கு சமமாகி விடும். கோவாவில் பாஜ அரசு அமைவதற்கு உதவும் வகையிலான எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம்.

கோவாவில் அமைந்துள்ள காங்கிரஸ் மற்றும் பாஜவின் சீரழிந்த அரசியல் கட்டமைப்பை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டு, கோவா மக்களுக்கு ஒரு புதிய விருப்பத்தை வழங்க வேண்டிய நேரம் வந்து விட்டது, இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us