sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசியல் சாசன தினம்: இன்று உச்சநீதிமன்றத்தில் மோடி உரை

/

அரசியல் சாசன தினம்: இன்று உச்சநீதிமன்றத்தில் மோடி உரை

அரசியல் சாசன தினம்: இன்று உச்சநீதிமன்றத்தில் மோடி உரை

அரசியல் சாசன தினம்: இன்று உச்சநீதிமன்றத்தில் மோடி உரை

9


UPDATED : நவ 26, 2024 12:44 PM

ADDED : நவ 26, 2024 02:41 AM

Google News

UPDATED : நவ 26, 2024 12:44 PM ADDED : நவ 26, 2024 02:41 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), உச்சநீதிமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவு கூறும் வகையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட தினமான, நவம்பர் 26, அரசியலமைப்பு தினம் அல்லது தேசிய சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

கடந்த, 1949, நவ., 26ல், இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியலமைப்பு சட்டம், 1950, ஜன., 26 முதல் நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்திய தினத்தை, ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். 1950 ஜன., 24 அன்று அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டு, அரசியலமைப்பு சட்டமாக மாறின. இச்சட்டத்தின் படி நம் நாடு இயங்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்ற பாடுபட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தவும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2015, நவ., 26ல், சட்ட தினம் கொண்டாட உத்தரவிட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசியலமைப்பு தினம் அல்லது தேசிய சட்ட தினம் கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து அரசியலமைப்பு சட்ட தினத்தன்று ( இன்று நவ. 26), உச்சநீதிமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, மற்றும் நீதிபதிகள் பி.ஆர்.காவி, சூர்யகாந்த், உச்சநீதிமன்ற பார்கவுன்சில் தலைவர் கபில் சிபல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அரசியலமைப்பின் மதிப்பை இளம் தலைமுறையினருக்கு உணர்த்தவும், இந்திய அரசியலமைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் உரையில் இடம் பெறுகிறது.

பார்லி.யில் ஜனாதிபதி உரை


அரசியலமைப்பு தினத்தையொட்டி இன்று (நவ. 26) பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், மற்றும் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். இந்நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசுவதற்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






      Dinamalar
      Follow us